பத்து நாள் வருகை பதிவை ஒரே நாளில் நிரப்பி சிக்கிய மருத்துவ மாணவி!

டி.முகமது இர்பான்,
பத்து நாள் வருகை பதிவை ஒரே நாளில் நிரப்பி சிக்கினார் மருத்துவ மாணவி ஒருவர்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி தான் இந்த ஜகஜலா வேலையை செய்திருக்கிறார்.
இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் சிக்கிய மாணவியைப்போல வேறு எவரேனும் இப்படி தில்லாலங்கடி வேலையை செய்திருக்கிறார்களா என்று விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அதேபோல் வருகை பதிவேட்டுக்கான பயோமெட்ரிக் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை துவங்கியுள்ளது.
அரசு மருத்துவனைகளுக்கு மருத்துவர்கள் சிலர் உரிய நேரத்தில் வருவதில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் இந்த பிரச்சணை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.