புதிய பதிவு மாவட்ட அலுவலகத்தில் முகாம் நடத்திய ஐ.ஜி சிவனருள்!

கு.அசோக்,
மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு புதியதாக துவங்கப்பட்ட திருப்பத்தூர் பதிவு மாவட்டம் அலுவலகத்தில் தமிழக பத்திர பதிவுத்துறை ஐ.ஜி. ப.சிவனருள்,இ.ஆ.ப. அவர்கள் முதல் பதிவு குறைதீர்க்கும் முகாமினை துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், இரட்டைமலை சீனிவாசன் பேட்டையில், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக துவங்கப்பட்ட பதிவு மாவட்ட அலுவலகத்தில், தமிழக பத்திரப் பதிவுத் துறை ஐஜி சிவனருள் முதல் பதிவு குறைதீர்க்கும் முகாமினை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மண்டலத்திற்கு உட்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஆண்டியப்பனூர் குரிசிலாப்பட்டு கூடப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி எண்1 இணை சார்பதிவாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் பொது மக்கள் பதிவு துறையின் சேவை சம்பந்தமான அனைத்து விதமான பயன்களை பெற்று வருகின்றனர்.மேலும் வாரம்தோறும் திங்கள் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பதிவு துறை வழங்கும் சேவைகளான பத்திரப்பதிவு பத்திரம் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் சம்பந்தமான புகார் மனுக்களை திருப்பத்தூரிலலேயே கொடுக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் பதிவு குறை தீர்க்கும் முகாம் என்பதால் தமிழக பதிவுத்துறை ஐஜி சிவனருள் திருப்பத்தூர் ரெட்டைமலை சீனிவசன் பேட்டையில் துவங்கப்பட்டுள்ள எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் முதல் பதிவு குறைதீர்க்கும் முகாமினை துவக்கி வைத்தார்.
அப்போது நிர்வாகத் துறையின் மாவட்ட பதிவாளர் சுடரொளி தணிக்கை துறையின் மாவட்ட பதிவாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.