வேட்டவலம் பேரூராட்சில் உச்சகட்ட தில்லாலங்கடி! ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

 எஸ்.விஜய்,

வேட்டவலம் பேரூராட்சியில் தில்லாலங்கடி! போலி பில்கள் மூலம் லட்சக்கணக்கில் வாரி சுருட்டும் மக்கள் வரிப்பணம்! செயல் அலுவலரின் விரும்பப்படாத செயல்கள்?

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் முதல்நிலை பேரூராட்சி ஏற்கனவே இருக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளைத் தோண்டியும் பழைய மின் இயந்திரங்களை எடுத்து புதிய மின் இயந்திரம் போல் வண்ணம் பூசி புதிய மின் இயந்திரம் வாங்கியதாக மூன்று வித ஒப்பந்தங்களை போலியாக உருவாக்கி அதில் குறைந்த உள்ள விலைப்புள்ளியைக் காண்பித்து இயந்திரம் வாங்கியதாக கணக்கு எழுதுகின்றனர்.

   இதன் மூலம் பல லட்ச ரூபாய் கையாடல் நடந்துள்ளது.  நோய் பரவாமல் தடுக்க பீச்சிங் பவுடர், துடப்பம் வாங்கியதாக கணக்கு எழுதி சுண்ணாம்பு கழிவுநீர் போன்றவற்றின் மூலம் தூய்மை செய்ததாக கணக்கு எழுதிக் கொள்கின்றனர். மேலும் பொதுக்கழுப்பிடங்களில் தூய்மை செய்ய ஒப்பந்தபுள்ளி மூலம் தனிநபருக்கு விடுகின்றனர். இவ்வாறு ஒப்பந்தம் விடப்பட்ட பொதுக்கழுப்பிடங்களை தூய்மை செய்வதாக கணக்கு எழுதி ஏமாற்றுகின்றனர்.

 துப்புரவு செய்வதற்குரிய நல்வாழ்வு பணியாளர்களுக்கு கையுறை தரமுள்ள காலணிகள் வழங்கியதாக ஆவணங்கள் உருவாக்குகின்றனர். இவற்றின் மூலமும் பணம் கையாடல் நடைபெறுகிறது.

   வாங்காத மின் விளக்கு, குழாய்விளக்கு, ஆவி விளக்கு, மின் கம்பி முதலானவை வாங்கியதாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அங்கீகரிக்காத கடைகளில் போலியான விலை பட்டியல்களை உருவாக்கி அந்த பொருட்களை வாங்கியதாகவும் இருப்பு உள்ளதாகவும் காண்பித்து விடுகிறார்கள்.

  வாங்கிய கடைகளின் பெயரில் போலியாவனும் தயாரித்து வணிகவரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணத்தை மட்டும் செலுத்தி அந்த பணத்தை கழித்து மீதமுள்ள பணத்தை கையாடல் செய்கின்றனர். இவ்வாறான போலி ஆவணங்கள் மூலம் மாதம் ஒன்றுக்குச் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, தலைவர்இளநிலை உதவியாளர் ஆகியோர் கூட்டணி அமைத்து ஒவ்வொருவரும் பல லட்சத்திற்கும் மேல் கூட்டு கொள்ளையடிக்கின்றனர்.

  மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் அதிகாரத்திற்குட்பட்ட மக்கள் பயன்பாட்டிற்காக நாள்தோறும் பத்தாயிரம் செலவினம் செய்யலாம் என விதிகள் உள்ளது அதை பயன்படுத்தி மாதம் மாதம் பல லட்ச ரூபாய்க்கு வவுச்சர்களை போட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனா.

   அதுமட்டுமின்றி. பேரூராட்சியில் 500 சதுர அடி வீட்டிற்கு அனுமதி வழங்க பத்தாயிரம் எனவும் 500 சதுர அடி அடிக்கும் மேல் ஆயிரம் சதுர அடி வரை அனுமதி வழங்க 20 ஆயிரம் எனவும் ஆயிரம் சதுர அடிக்கு மேல் 2000 சதுர அடி வரை கட்டும் வீட்டிற்கு அனுமதி தர ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கை மாறுவதாக தகவல் மேலும் வணிகரீதியான கடைகளுக்கு 100 சதுர அடி உள்ள ஒரு கடைக்கு அனுமதிக்கு ரூபாய் பத்தாயிரம் இரண்டு மாடி அல்லது மூன்று மாடி வரை வணிக வளாகம் கட்டும் கட்டிடத்திற்கு அனுமதி வழங்க ரூபாய் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பெறுகிறார்களாம்.

  அதேபோல் சாலைகளில் நடைபாதை கடைகளுக்கு அனுமதி வழங்க ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் எனவும் திருமண மண்டபங்கள் அனுமதி வழங்க ரூ.5 லட்சம் வரையும், குடிநீர் குழாய் இணைப்பு வீடுகளுக்கு வழங்க 20 ஆயிரம் ரூபாய் சமாக  ஃபிக்ஸ் செய்துள்ளதாக தகவல் தற்போது குடிநீர் குழாய்கள் வழங்கு 25 ஆயிரம் வரை லஞ்சம் பெறுவதாக வேட்டவலம் பேரூராட்சி பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இப்படி பல லட்சம் வரை வேட்டவலம் பேரூராட்சியில் லஞ்ச ஊழல் மோசடி நடப்பதாக தகவல் வந்துள்ளது.

   செயல் அலுவலர் சுகந்தியும், இளநிலை உதவியாளரும் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிலரும் இதில் ஆர்வமாக உள்ளனராம்.

 எனவே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் இ.ஆ.ப., வேட்டவலம் பேரூராட்சிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.