கலெக்டரின் ஆவின் விசிட்டும்... பதற்றமும்!
ம.பா.கெஜராஜ்,
கலெக்டரின் திடீர் வருகையால் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் சில குறிப்பிட்ட நபர்கள் பதறிப் போனார்களாம்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) திரு.ராஜ்குமார், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பாலச்சந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் முனைவர்.ப.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வருவாய்த் துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் பட்டா பிழை திருத்தம் தொடர்பாக சிறப்பு பட்டா முகாம் நடைபெறுவதை தொடர்ந்து வேலூர் வட்டம், சத்துவாச்சாரி உள்வட்டம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சிறப்பு பட்டா முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆவின் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேறும் வெளிப்புற நுழைவுவாயில் பகுதியில் வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஆவின் பொது மேலாளர் திரு.சாம்பமூர்த்தி, பொறியியல் மேலாளர் திரு.மேசகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
கலெக்டரின் திடீர் வருகையால் ஆவினில் சில குறிப்பிட்ட நபர்கள் பதறிப் போனார்களாம்.