டி.ஆர்.ஓ.உறுதி மொழி!

தெ.நெல்சன்,
வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி அவர்கள் தொடங்கி வைத்து அல்பெண்டசோல் மாத்திரைகளை மாணாக்கர்களுக்கு வழங்கினார்.
பின்னர் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பானுமதி, வேலூர் வட்டாட்சியர் திரு.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.