விபத்தில் சிக்குபவர்களை போக்குவரத்து காவலர்கள் சந்திக்கனும்! டிஐஜி தலைமையில் கூட்டம்!

ம.பா.கெஜராஜ்,
சாலை விபத்துக்களில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்திப்பதுடன், விபத்துகளின் பின்விளைவுகளை புரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியின் Physical Medicine and Rehabilitation துறை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. நான்கு கட்டமாக நடைபெற உள்ள இப்பயிற்சியின் தெடக்க விழா (01.08.2023) பாகாயம் புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பயிற்சியினை, காவல்துறை துணைத் தலைவர் முனைவர் . எம். எஸ்.முத்துசாமி. இ.கா.ப., அவர்கள் துவக்கிவைத்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.என்.மணிவண்னன், இ.கா.ப.. அவர்கள் முன்னிலை வகித்தார்.
சிவிசி வேலூர் சிஎம்சி வேலூர் பி.எம்.ஆர்.துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். ஜேக்கப் ஜார்ஜ், பி.எம்.ஆர்.துறை பேராசிரியர் டாக்டர் ஜீடி ஆன் ஜான், மற்றும் பயிற்சியாளர் டாகட. குரு நாகராஜன் MSW Ph.D. (WHO Certified Trainer) ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வகுப்பில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உரையாடிய நிகழ்வு போக்குவரத்து காவலர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.