கொடநாடு கொலை கொள்ளை:-காரணமானவர்களை தண்டியுங்கள்!! ஓ.பி.எஸ். அணியும் அமமுகவும் ஆர்பாட்டம்!

கொடநாடு கொலை கொள்ளை:-காரணமானவர்களை தண்டியுங்கள்!! ஓ.பி.எஸ். அணியும் அமமுகவும் ஆர்பாட்டம்!

 ஜி.கே.சேகரன்,

 கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுதரகோரி ஓ.பி.எஸ். அணியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

 வேலூர் மாவட்டம், வேலூ£,¢ சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுகவின் ஓ.பி.எஸ் அணியினரும் இணைந்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்று தரகோரி ஆர்பாட்டம் நடந்தது.

  இதில் அப்புபால் பாலாஜி, அதிமுக ஒ.பி.எஸ். அணி சார்பில் பங்கேற்றார். அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற் கோஷங்களை எழுப்பினார்கள்.

குறிப்பு:-  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களிடம் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிளான முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவினர் மனு ஒன்றை அளித்தனர்.

  அதில் அதிமுக பெயரைக் கூறி ஆர்பாட்டம் நடத்த முயல்பவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் குறித்த நேரத்தில் ஆர்பாட்டத்தை எதிர் பார்ட்டியினர் நடத்தி முடித்துள்ளதுள்ளனர்.