தொங்குகிற உயர்மின் அழுத்த கம்பியை அகற்றுங்கள்!

ஜி.கே.சேகரன்,
சோளிங்கர் அருகே ஆயல் கிராமத்தில் வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் மின் அழுத்த உயர்களை அகற்றுவது குறித்து ஒன்றிய குழு தலைவர் மற்றும் பாமக ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுக்கு முன்னதாக அரசு 80 க்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பயணாளிகள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த லைன் செல்கிறது. வீட்டின் மீது நின்றால் கைத்தொடு தூரம் மட்டுமே உள்ளது. இந்த உயர்மின்னழுத்த லைன் காரணமாக அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது.
இந்த வீட்டுப் பகுதியில் செல்லும் உயர்மின்னழுத்தம் லைனை மாற்றி தர வேண்டும் என ஒன்றிய குழு உறுப்பினர் வேண்டா சரவணன் தலைமையில் பொதுமக்கள் ஒன்றிய பெருந்தலைவர் கலைக்குமாரிடம் மனு அளித்தனர்.
மனுவை ஏற்றுக்கொண்ட ஒன்றிய பெருந்தலைவர் கலைக்குமார், பாமக கிழக்கு மாவட்ட தலைவரும் ஒன்றிய குழு உறுப்பினருமான அ.ம.கிருஷ்ணன் , ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
உயர்மின்னழுத்த லைன் காரணமாக சுமார் 20 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வில்லை , ஒரு சிறுமி மின்லைனால் விபத்து சிக்கியுள்ளனர்.
ஆக அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று தெறிவித்தனர்.இது குறித்து அரசுக்கு சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து உடனடியாக இந்த உயர்மின்னழுத்த லைனை மாற்றி அமைக்க நடவடிக்கை எட்ப்பதாக உறுதியளித்தனர்.அப்போது திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.