தூக்கிவீசப்பட்ட பணியாளர்! மூடிமறைக்க முயன்ற நிர்வாகம்!

தூக்கிவீசப்பட்ட பணியாளர்! மூடிமறைக்க முயன்ற நிர்வாகம்!

கு.அசோக்,

   சிப்காட் அடுத்த கிருஷ்ணாபுரம் தனியார் தொழிற்சாலையில் கிரைன் மூலம் இரும்பை ஏற்றும் போது கிரேன் அருகே இருந்த மின்சார கம்பத்தின் மீது உரசியதில் ஜெகதீஷ் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலி உறவினர்கள் தொழிற்சாலை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

   இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் திருப்பதி என்டர்பிரைசஸ் இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் ஜெகதீஷ் -30,, இவர் நேற்று கம்பெனியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அருகே இருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்

உயிரிழந்த ஜெகதீஷை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் இந்த சம்பவம் குறித்து கம்பெனி நிர்வாகம் அவரது உறவினர்களுக்கு  முறையான தகவல் தெரிவிக்காத நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் காவல் துறையை கண்டித்து லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகே உறவினர்கள் மற்றும் அப்பகுதி சேர்ந்த திரளான பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

  போராட்டம் காரணமாக  கிராமப்புறங்களில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பல்வேறு தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டனர்

   இந்த போராட்டம் சம்பந்தமாக சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்,

 இந்நிலையில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர் உயிரிழந்து சம்பவத்தை கம்பெனி நிர்வாகம் முறையான பதில் அளிக்காத  செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.