குரோமியம் கழிவை பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலைகள்:-கண்டு கொள்ளாத மாசு கட்டுபாட்டு வாரியம்! 

குரோமியம் கழிவை பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலைகள்:-கண்டு கொள்ளாத மாசு கட்டுபாட்டு வாரியம்! 

ஜி.கே.சேகரன்,

  தோல் பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் குரோமியம் உள்ளிட்ட உயிர் கொல்லி இராசாயன கழிவு நீரை தொழிற் சாலையினர் பாலாற்றில் கலந்து வருகிறார்கள். இது குறித்து வாணியம்பாடியிலுள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் கூட, அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் வாங்கின பணத்துக்கு விசுவாசம் காட்டி வருகிறார்கள்.

 இந்நிலையில், வாணியம்பாடி அருகே மாராப்பட்டு பாலாற்றில் வெள்ளம் வருவதை பயன்படுத்தி தோல் தொழிற்சாலை கழிவு நீரை பாலாற்றில் நேரடியாக விட்டதால் பாலாற்று நீரில் நுரை கிளம்பி காட்சியளிக்கிறது - இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை  அடைந்திருக்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தற்பொழுது பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 இந்த நிலையில் மாராபட்டு தரைப்பாலத்தில் செல்லக்கூடிய தண்ணீரில் நுரை பொங்கி மலைபோல் காட்சியளிக்கிறது.

 தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் இந்த பிரச்சனை என்று சொல்லும் விவசாயிகள், தண்ணிரை இப்படி கெடுத்தால் விவசாயம், குடிநீர் எல்லாம் என்ன ஆவது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

 இந்த காட்சிகளை சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் வீடியோ எடுத்து பரப்பி வருகின்றனர்.

 அதை பார்த்த பொதுமக்கள் பாலாற்றில் நேரடியாக தோல் தொழிற்சாலை ரசாயண கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள் மீதும் நீரை மாசுபடுத்துவதாலும் இது போன்ற தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட வேண்டுமெனவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகின்றனர். அப்படியே சுத்திகரிப்பு நிலையங்களின் நாடகத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

   எப்புடி நடவடிக்கை எடுப்பாங்க பாருங்க?