பலே திருடர் மூவர் பிடிபட்டனர்! லாட்டரி முதலாளிகள் பிடிபடுவார்களா?

கு.அசோக்,
குடியாத்தத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்யும் பெரும் முதலைகளை அங்குள்ள காவல்டிவிஷன் அலுவலர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. லாட்டரி விற்பனைக்கும் பஞ்சமில்லை. இங்கிருந்துதான் தமிழகம் முழுவதுக்கும் இந்த பிசினஸ் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் குடியாத்தம் நகர ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார் குடியாத்தம் நான்கு முனை கூட்டு ரோடு அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
¢அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
¢ இதனையடுத்து மூன்று பேரையும் குடியாத்தம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் போலீசார்அவர்கள் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்து தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஜலில் (55) அஷாம்பாஷா ( 23) அஹமத்பாஷா ( 30)ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்களிடம் திருட்டு நகை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர்கள் ராஜேஷ்குமார், நவரத்தன்குமார், அப்பய்குமார், ஆகிய 3 நகை கடை உரிமையாளர்களை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படியே வழக்கு பதிந்துள்ள லாட்டரி முதலாளிகளையும் கைது செய்தால் ஏழைகள் மகிழ்வார்கள்.