சிறுத்தை கடித்து 9 ஆடுகள் பலி!

கு.அசோக்,
நாட்றம்பள்ளி அருகே சிறுத்தை கடித்து 9 ஆடுகள் பலி சிறுத்தை நடமாட்டமா என மக்கள் அச்சம்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி அப்பகுதியை சேர்ந்த திருப்பதி இவருடைய மனைவி அலமேலு(70) கணவர் இறந்த நிலையில் ஆடு வளர்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக சுமார் ஒன்பது ஆடுகள் உள்ளன, வழக்கம்போல் நேற்று ஆடுகள் அனைத்தையும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பவும் மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் 9 ஆடுகளையும் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் காலை எழுந்து பார்க்கும் பொழுது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒன்பது ஆடுகளும் ஏதோ விலங்கு கடித்து பலியாகி உள்ளன.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிறுத்தை கடித்து இவை இறந்துள்ளதாக அச்சத்தில் உள்ளனர். ஆகவே அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் 9 ஆடுகளை மட்டும் நம்பி வாழ்வாதாரம் நடத்திவந்த அலமேலு தனக்கு ஏதாவது மாவட்ட நிர்வாகம் நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.