நாம தான் கெத்து காட்டனும்! வேலூர் திமுக தீர்மானம்!!

ஜி.கே.சேகரன்,
சென்னையில் வரும் 28 ஆம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழாவில் வேலூர் மாவட்டத்திலிருந்து அதிக அளவில் திமுகவினர் பங்கேற்பது எனவும் - கலைஞரின் 99 ஆவது பிறந்த நாளை கட்சி கொடியேற்றி அனைத்து பகுதிகளிலும் கொண்டாடுவது என வேலூர் மத்திய மாவட்ட திமுக பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில் மாவட்ட பொதுகுழு கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வரும் 28 ஆம் தேதி மாலை சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெறும் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் வேலூர் மாவட்டத்திலிருந்து அதிக அளவு திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் பங்கேற்பது என முடிவானது.
மேலும் 14 வயது முதல் தமிழக மக்களுக்காக பாடுபட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை நினைவு கூர்ந்து வரும் ஜுன் 3 ஆம் தேதி கலைஞரின் 99 ஆவது அகவை தினத்தை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் கலைஞர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்தும் ஓராண்டு ஆட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.