வனத்துறையினரிடம் வாக்குவாதம்!

வனத்துறையினரிடம் வாக்குவாதம்!

 கு.அசோக்,

 தும்பேரி, அண்ணா நகர் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை, வனத்துறை இடம் என கூறி வெளியேற்ற முயற்சி.... மக்கள் காலவரையற்ற உண்னாவிரத போராட்டம் - வனத்துறை அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதம்

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணா நகர் பகுதியில் சுமார் 60- ஆண்டுகளுக்கு மேலாக 20 பேர் வீடு கட்டி அங்கேயே வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் வனத்துறையினர் இது தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி அவர்களை காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

 இதனை கண்டித்து தும்பேரி அண்ணா நகர் பகுதியில் 20 வீடுகளை சேர்ந்தோர் தங்களின் குடும்பத்திருடன் கையில் தேசிய கொடியுடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 தமிழக அரசும் முதல்வரும் இதில் தலையிட்டு தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமெனவும் கோரி உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 இதனை அறிந்து வாணியம்பாடி வனச்சரகர் இளங்கோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்று இது வனத்துறை இடம் தான் நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு வெளியேறி வேண்டுமென கூறியதால் ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறை சரகர் இளங்கோவை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 அரசு தங்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கும் வரையில் உண்ணாவிரதம் தொடரும் என மக்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

  இருப்பினும் மக்கள் கலைந்து சென்றனர்.