சிறுபாண்மை இந்துக்கள் மீது தீவிரவாதிகள் குறி!

சிறுபாண்மை இந்துக்கள் மீது தீவிரவாதிகள் குறி!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  காஷ்மீரில் வாழ்ந்துவரும் சிறுபாண்மை இந்துக்கள் மீது தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவது மிகவும் ஆபத்தாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

  அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலை சந்திப்பதாகவே கருதப்படுகிறது.

 கடந்த 1990 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் தொடங்கிய பின்னர் பல காஷ்மீர் பண்டிட்கள் மாநிலத்தை விட்டு வெளியேறினாலும் 800-க்கும் அதிகமான குடும்பங்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தன.

 அவர்களில் சஞ்சய் டிக்கூ என்பவர் காஷ்மீரை விட்டு வெளியேறாத பண்டிட்களின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். சங்கர்ஷ் சமிதி அமைப்பின் முக்கிய தலைவரும் அவரே. அவரை "ஸ்ரீநகரில் உள்ள எனது வீட்டில் இருந்து வெளியேற்றி விடுதி ஒன்றில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

சங்கர்ஷ் சமிதி அமைப்பின் சஞ்சய் டிக்கூ

 

 இதுகுறித்து சஞ்சய் டிக்கூ தெரிவிக்கையில்,மார்ச் 2001இல் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சித்திசிங் போரா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட சீக்கிய கிராமவாசிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு தற்போது நினைவுக்கு வருகிறது.

 2003 ஆம் ஆண்டு புல்வாமா மாவட்டத்தில் உள்ள நாடிமார்க் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசு தான் பொறுப்பு."நான் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது எம்.எல். பிந்த்ரூ கொல்லப்படும் வரை அரசு கண்டு கொல்லவேயில்லை என்று அவர் குறை கூறுகிறார்.

  ஸ்ரீநகரில் உள்ள பிரபல மருந்து கடை உரிமையாளரான மக்கான் லால் பிந்த்ரூ கடந்த செவ்வாய் அன்று அடையாளம் அறியப்படாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் பிகாரில் இருந்து வந்த இந்து ஒருவரும், காஷ்மீரி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுனர் ஒருவரும் வெவ்வேறு நிகழ்வுகளில் கொலை செய்யப்பட்டனர்.

  சீக்கிய மதத்தைச் சேர்ந்த 46 வயதாகும் தலைமை ஆசிரியை சுபீந்தர் கௌர் மற்றும் காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த அவரது சக ஆசிரியர் தீபக் ஆகியோர் வியாழனன்று ஸ்ரீநகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

  அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அரசின் தலைமைச் செயலகம் முன்பு அவரது உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் சமீபத்தில் நடந்த கொலைகள் காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்கள் இடையே அச்ச உணர்வைத்தான் உண்டாக்கியுள்ளது.

 இது போன்ற அச்ச உணர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புஇருந்தது அந்த கதை மீண்டும் திரும்பிவிடுமோ என்கிற சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.