நகராட்சி ஆணையர் கையெழுத்தை போட்டுக்கொண்ட மலர்கொடி-பொற்கொடி!

நகராட்சி ஆணையர் கையெழுத்தை போட்டுக்கொண்ட மலர்கொடி-பொற்கொடி!

டி.முகமது இர்பான்,

 நகராட்சி ஆணையர் கையொப்பமிட்டு வழங்கியது போல போலி ஆவணங்கள் தயாரித்து மின் இணைப்பு பெற்றதாக இருவர் மீது காவல் நிலையத்தில் புகார்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் பகுதியைச் சேர்ந்த மலர்க்கொடி மற்றும் பொற்கொடி. இவர்கள் இருவரும் தங்களுடைய காலி மனையில் கட்டிடம் கட்டுவதற்கு முன்பாகவ சொத்துவரி செலுத்தியதாக போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.

  அதுமட்டுமின்றி மின் இணைப்பு பெற  நகராட்சியின் ஆட்சேபனை இல்லை என நகராட்சி ஆணையர் வழங்கியது போல போலியாக கையொப்பம் இட்ட ஆவணங்களை தயாரித்து மின்னிணைப்பு பெற்றுள்ளனர்.

 இது பற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி நகரகாவல் நிலையத்தில் நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு புகார் அளித்துள்ளார்.