போலிசாரின் மன அழுத்தத்தை குறைத்த சப் இன்ஸ்பெக்டர் பணி நிறைவு பெற்றார்!

ம.பா.கெஜராஜ்,
போலிசாரின் மன அழுத்தத்தை விரடியடிக்கும் பயிற்சியை முடித்த சப் இன்ஸ்பெக்டர் திரு.ஆனந்தன அவர்கள் இனிதே பணி நிறைவு பெற்றார்.
வேலூர், வட ஆற்காட்டின் தலைநகரமாக இருந்த போது, அங்குள்ள காவல் துறையின் ஆயுதப்படையில் 25.10.1984 ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தவர் ஆனந்தன். வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றியவர்.
அதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற அவர் எ.ஸ்.பிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை பல பாராட்டு பத்திரங்களைப் பெற்றுள்ளார்.
அதில் திரு.இராஜ கோபால், இ.கா.ப.அவர்கள் தமிழ்நாடு காவல் துறை இயக்குநராக இருந்த போது ஆனந்தனுக்கு சிறந்த பாராட்டு பத்திரம் வழங்கப்பட்ட்டது.
கொலை வழக்கு ஒன்றில் சுமார் பத்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பேர்னாம்பட்டு முருகேசன் என்பவரை அரெஸ்ட் செய்தமைக்காக இப்பரிசு அவரை தேடி வந்தது.
அதே போல் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது ராப்ரி மற்றும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நபரான கொற பாலகிருஷ்ணன் என்பவரை அரெஸ்ட் செய்தமைக்கு அப்போதைய டிஜிபி எஸ்.பி.ஷர்மா இ.கா.ப. அவர்கள் ஆனந்தனுக்கு பாராட்டு பத்திரம் வழங்கினார்.
அதே போல் ரமேஷ் குடவ்லா இ.கா.ப. அவர்கள் வேலூர் சரக டிஐஜி யாகக இருந்த போது அவரது ஸ்பெஷல் டீமில் இரண்டு ஆண்டு பணியாற்றியுள்ளார்.
அப்போது வெளி மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் வேலூர், காந்தி ரோட்டில் உள்ள நடராஜ் ஆச்சாரி என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கயிறுகட்டி இறங்கி ஏழரை கிலோ தங்கத்தை அள்ளிச்சென்றனர்.
அதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் ஆனந்தன் பணியாற்றியவர். அந்த கொள்ளை கும்பலை பிடிக்க மூன்று தடவையாக மொத்தம் அறுபது நாள் மேற்கு வங்கம், மால்டா,ஜார்கண்ட போன்ற மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இந்த கொள்ளையை நடத்தியது மிதுன் மண்டேல் என்பதையும், அவனது தலைமையில் 12 பேர் கொண்ட டீம் தான் வேலூர் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி பக்கத்திலுள்ள நகைக்கடையில் கொள்ளையடித்ததையும் கண்டுபிடித்தனர். இதற்காக ஒரு பாராட்டு பதக்கத்தையும் ஆனந்தன் பெற்றார்.வெளிமாநில கொள்ளையர்கள் முதன்முதலில் இப்படி கொள்ளையடித்து மாநிலத்தையே அதிர வைத்த சம்பவம் அது.
பின்னர் தமிழகத்தில் சைபர் கிரைம் என்கிற புதிய பிரிவு தொடங்கப்பட்டதும் அதில் சிறப்பு பணி இவருக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மது விலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றியுள்ளார்.
பின்னர் "வெல் பீயிங்" என்கிற காவலர்களுக்கான நலப்பிரிவில் சிறப்பு பணியாற்றினார். காவல் பணியில் ஏற்படும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் போலிசார் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு பாதிப்படைகிறார்கள் என்பதினால் அவர்களின் மன அழுத்தத்தை போக்கிட இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டடது.
இதில் கவுன்சிலிங் கொடுப்பதற்காக கர்நாடாக மாநிலத்திலுள்ள "நிமான்ஸ்" எனப்படும் "நேஷனல் இன்ஸ்டிடைட் ஆஃப் மென்டல் ஹெல்த் மற்றும் நரம்பியல் ஆய்வு மையம்" அனுப்பிவைக்கப்பட்டு அங்கு பயிற்சி முடித்தவர்.
அதன் பின்னர் முது நிலை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஆனந்தன் மன அழுத்தம் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான போலிசாருக்கு வகுப்பெடுத்து அவர்களை குணமாக்கினார்.
இந்நிலையில் எஸ்.ஐ.திரு.ஆனந்தன் அவர்கள் வேலூர் டிஐஜி அலுவலகத்தில் பணியாற்றி தற்போது 31.05.2022 ஆம் தேதியன்று பணி நிறைவு பெற்றார்.
அவரையும் அவரது பணியினையும் அவரை அறிந்த பலர் உளமாற பாராட்டினார்கள்.