வெறும் கை வேலாயுதமான டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள்!

ஜி.சாந்தகுமார்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற வேண்டியோர், கொரோனா பரவல், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இரண்டாண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டனர். அதில் 60 வயதை கடந்த 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு ஓய்வூதிய பலனாக, 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு எந்த பண பலனும் வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, பணி நிறைவு விழா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இல்லை. மேலாண் இயக்குனர் அலுவலகங்களுக்குச் சென்று, ஓய்வு பெற்றதற்கான சான்றிதழை மட்டும் பெற்றுக் கொண்டு பரிதாபமாக நடையை கட்டினர்.
இதனால் அவர்கள் மன உலைச்சலாக காணப்பட்டனர்.