200 கோடி ரூபாய் செலவிட்டும் மாம்பலம் பகுதிகள் மூழ்குகிறதே!  ம.பா.கெஜராஜ்,

200 கோடி ரூபாய் செலவிட்டும் மாம்பலம் பகுதிகள் மூழ்குகிறதே!   ம.பா.கெஜராஜ்,

 ம.பா.கெஜராஜ்,

  இதுவரை 200 கோடி ரூபாய் செலவிட்டும்,தற்போதைய சீரமைப்பு பணி டெண்டரிலும், அதிகாரிகள் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளதால், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 மாம்பலம் பகுதிகள் மூழ்குகிறதே என்று மக்கள் வேதனை தெரிவித்து வரும் சூழலில் இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவினர் விசாரிப்பதா

 சென்னை, வள்ளுவர்கோட்டம், தி.நகர், மேற்கு மாம்பலம், பாண்டி பஜார் ஆகிய பகுதிகளில் இருந்து மழை நீர் வடியும் வகையில், மாம்பலம் கால்வாய் உள்ளது.

   இந்த கால்வாய்களை தூர் வாரி சீரமைப்பதில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக, சமீபத்திய மழைக்கு, தி.நகர், மாம்பலம் ஆகிய பகுதிகள் மழைநீரால் மூழ்கின.

 இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இது தொடர்பாக உயர் முதலமைச்சரின் பார்வைக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டது.

 அதன் பின்னர் சீரமைப்பு பணி மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனங்கள், அப்பணிகளுக்கு பொறுப்பான மாநகராட்சி அதிகாரிகளிடம் விரிவான விசாரணை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படியிருக்க 5.6 கி.மீ., நீளம் உடைய மாம்பலம் கால்வாய் தூர் வாரி சீரமைக்கும் திட்டத்திற்காக, 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை, 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள விபரம் தெரிய வந்துள்ளது. 

  மேலும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 106.77 கோடி ரூபாய் செலவில், மாம்பலம் கால்வாயை மேம்படுத்த ஒன்பது பிரிவுகளாக திட்டமிடப்பட்டது. ஒன்பதில், ஐந்து பிரிவுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பணி அனுமதி வழங்கப்பட்டது. மூன்று பிரிவுகளுக்கு 'டெண்டர்' வழங்கப்பட்டு, பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. ஒரு பிரிவுக்கு திட்ட மதிப்பீடே தயார் செய்யப்படவில்லை.

 இதனால் தற்போதைய மழைக்கு தி.நகர் தாக்கு பிடிக்க முடியவில்லை.

  ஜி.என்., செட்டி சாலை வழியாக உள்ள இரண்டு மழை நீர் வடிகால் இணைப்பு வாயிலாக, கால்வாய்க்கு அதிக நீர்வரத்து இருந்தது. மற்ற இணைப்புகளில், அடைப்பு மற்றும் சேதம் காரணமாக, மழை நீர் கால்வாயில் விழவில்லை. இதுவே, பெருமளவில் பாதிப்பு ஏற்பட காரணமாயிற்று.

 குறிப்பாக, பராசங்குபுரம், அஜிஸ் நகர், ரங்க ராஜபுரம், சுப்பிரமணிய தெருகளில் இருந்து வரும் நீர் அனைத்தும், ஜி.என்., செட்டி சாலையில் உள்ள, மழைநீர் வடிகாலுக்கு வந்த நிலையில் தான் பாலத்தின் வழிகள் நீரில் மூழ்கின.

 அதே போல் மாம்பலம் கால்வாயிலும், ஆங்காங்கே பணிகளுக்காக கட்டட கழிவுகள் கொட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், மாம்பலம் கால்வாயில் நீர் செல்லாமல் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்தியது.

 இந்நிலையில்,ஆட்சி மாற்றம், அதிகாரிகள் மாற்றம் காரணமாக மாம்பலம் கால்வாய் சீரமைப்பு பணி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளும் முடங்கியதே வெள்ள பாதிப்பிற்கு காரணம் என்கிறது மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  அப்படியிருக்க, மாம்பலம் கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் சொல்வது என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்,   சென்னையில் மற்ற இடங்களை போல், மாம்பலம் கால்வாய் பகுதியில் பணிகளை மேற்கொள்ள முடியாது.

  அருகிலேயே குடியிருப்புகள் இருப்பதால் பாதுகாப்பு தடுப்பு அமைத்த பின் தான் பணி மேற்கொள்ள இயலும். நவம்பர் வரை எங்களை பணியாற்ற அனுமதித்தனர். இதனால், கால்வாயில் இருந்த கட்டட கழிவுகளை அகற்ற முடியவில்லை. நீர் தேங்கிய பின் தான் கழிவுகள் அகற்றப்பட்டன. ஆனாலும், நீர் வடியவில்லை.

   மாம்பலம் கால்வாய் பணி, ஒன்பது பகுதியாக பிரிக்கப்பட்டது. இதில், ஐந்து பகுதிகளில் மட்டுமே பணிகள் துவங்கப்பட்டன. குறிப்பாக, நீர் அடையாறு ஆற்றில் சேரக்கூடிய பகுதிகளில் பணி செய்யப்படவில்லை.வள்ளூவர் கோட்டம் பகுதியில் இருந்தே பணி துவங்கியது.

  அங்கு, நாங்கள் தூர் வாரி ஆழப்படுத்தி வைத்திருந்தோம். மாம்பலம் கால்வாயில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்ட பின்பும், மாம்பலம், தி.நகர் பகுதியில் மழைநீர் தேங்கியது.

 அனைத்து வடிகால்களையும் முறையாக தூர் வாரமல், ஒட்டுமொத்த வெள்ள பாதிப்புக்கும் நாங்கள் தான் காரணம் என்பது போல் குற்றம் சாட்டுகின்றனர். அது தவறான சங்கதி என்கிறார்கள் அவர்கள்.

 மாம்பலம் கால்வாய் பணிகளை டெண்டர் எடுத்த ஐந்து ஒப்பந்ததாரர்களும், தற்போது 50 கோடி ரூபாய்க்கும் மேல், நடைபாதை, சாலை, மழைநீர் வடிகால், குளம் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

  இந்த பணிகள் அனைத்தும் அ.தி.மு.க., ஆட்சி முடியும் நேரத்தில், இவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையில் அந்த பணிகளின் விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

  பொதுவாக, எந்த ஒரு சிறிய பணிகளுக்கும், பணியின் மதிப்பீடு, பணி செய்யும் ஒப்பந்ததாரர், பணி விபரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தகவல் பலகை வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அப்படி வைத்தால், எந்த முறைகேடு செய்தாலும் சிக்கிக் கொள்வோம் என்பதால், ஒப்பந்ததாரர்களும் தகவல் பலகை வைப்பதில்லை; அதிகாரிகளும் அதை கண்டு கொள்வதில்லை.

   இப்படிப்பட்ட குளறுபடிகளால் மாம்பலம் காள்வாய் சீரமைக்கப்படவில்லை, இதனால் பல பகுதிகள் அங்கு மூழ்கிக்கிடக்கின்றன. இதையெல்லாம் சுட்டிக்காட்டி எழுந்த புகாரின் அடிப்படையிலேயே  லஞ்சஒழிப்புத்துறையின் கழுகு பார்வைக்கு இவை முன் வைக்கப்பட்டிருக்கின்றதாம்.