தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் தனியார் வசம் ஆகிறதா?

தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் தனியார் வசம் ஆகிறதா?

 ஆர்.ராஜேஷ்குமார்,

    புதிதாக அமைக்கப்பட உள்ள இரண்டு பேருந்து நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொருப்பை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.

   தமிழகத்தின் தலைநகரான  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

  குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் பாடாய் படுகிறார்கள்.

 இந்நிலையில்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  அவற்றில் ரூ.400 கோடி செலவில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரு பேருந்து நிலையமும், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே ரூ. 300 கோடி செலவில் புதிய பேருந்து நிலையமும் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  

  அப்படியிருக்க வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 60 % நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு இந்த பேருந்து நிலையம்  பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த 2 பேருந்து நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறுப்புகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

  இதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜே.எல்.எல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.