இதற்கு போய் எக்ஸ்பிரஸ் கட்டணமா? ரத்து செய்ய கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் மனு!

இதற்கு போய் எக்ஸ்பிரஸ் கட்டணமா? ரத்து செய்ய கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் மனு!

கு.அசோக்,

 சித்தேரி ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் ஜோலார்பேட்டை  ரயிலில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பதை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து பாஸ்ட் பேசஞ்சர் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டம் சித்தேரி ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்தேரி கலைஞ்செழியன்அசமந்தூர் தீனதயாளன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசுகையில்,  அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் ரயில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கிறது.  இந்த ரயிலில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதை ரயில்வே நிர்வாகம் மறு பரிசீலனை செய்து ஃபாஸ்ட் பேசஞ்சர் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

 அதேபோன்று இந்த ரயில் சித்தேரியில் நின்று செல்ல வேண்டும்.  அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு இயக்கப்பட்ட விரைவு ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  மீண்டும் இந்த ரயிலை விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. 

 கூட்டத்தில் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வரை பயணிகளின் குறைகளை கேட்கும் கன்வீனரான பார்த்தசாரதி கலந்து கொண்டார்.

 ரயில் பயணிகள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கை மனுவை ஸ்டேஷன் மாஸ்டர் பவன்குமாரிடம் கொடுத்தனர். இதில் கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.