மாவட்ட நிர்வாகத்தின் புதிய ஆஃபர்கள் என போஸ்டர்! தஞ்சையில் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய ஆஃபர்கள் என்கிற தலைப்புடன் தஞ்சையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது.
ஏரி மண் மற்றும் முரம்பு ஆகியவை விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாகவும், அதை தடுக்கும்படியாகவும் சமூக செயற்பாட்டாளர் துரைகுணா என்பவர் பல மனுக்களை அனுப்பியிருக்கிறார்.
விஏஓ முதல் மாவட்ட ஆட்சியர் வரைக்கும் அனுப்பப்பட்ட மனுக்களுக்கு நோ ரெஸ்பான்ஸ் என்பதால், இது குறித்து எட்டாம் தேதி போஸ்ட்டர் அடித்து ஒட்டப்போவதாகவும், அதற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று திருவையாறு டிஎஸ்பியிடம் மனு அளித்தார்.
மேலும் ஒட்டப்படும் போஸ்டர்களை கிழிக்காதபடிக்கு போலீஸ் பாதுகாப்பும் அதில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சொன்னபடியே தஞ்சையில் போஸ்டர்களை ஒட்டி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா அவர்களிடம் விவரம் கேட்ட போது, புகாரில் உண்மை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.