மகளிர் தினவிழாவில் வேலூர் நறுவீ மருத்துவமனையை பாராட்டிய ஆட்சியர்!

மகளிர் தினவிழாவில் வேலூர் நறுவீ மருத்துவமனையை பாராட்டிய ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது - வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசினார்.

          நிகழ்ச்சிக்கு நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து வரவேற்று பேசுகையில் குடும்பத்திலும், சமுதாயத்திலும் மகளிரின் பங்களிப்பு மற்றும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் அவர்களை கௌவரப்படுத்தும் வகையில் இங்கு விழா நடத்தப்படுகிறது.

  நறுவீ மருத்துவமனையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நமது நாட்டை தாய்நாடு என்றும் நமது மொழியை தாய் மொழி என்று தான் அழைக்கிறோம், தவிர தந்தை நாடு என்றோ தந்தை மொழி என்றோ கூறுவதில்லை. 

          நறுவீ மருத்துவமனை மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இங்கு பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பெண்களாக உள்ளனர். இது பெண்கள் நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகளிர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. நாள் தோறும் பெண்களை போற்றும் விதமாக மகளிர் தினத்தை நாம் தினமும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து வைத்து சிறப்புரையாற்றுகையில்,

          நறுவீ மருத்துவமனை சர்வதேச அளவில் சிறந்த மருத்துவ சேவை அளித்து வருவது பாராட்டுக்குரியது. குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் பெண்கள் குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல முறையில் பராமரிப்பதை தமது கடமையாக கருதி அர்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். 

  எனவே பெண்கள் சமுதாயத்தை நாம் போற்றி பாராட்ட வேண்டும். சர்வதேச பெண்கள் தினத்தை ஆண்டுக்கு ஒரு முறை இன்றி நாள்தோறும் நாம் கொண்டாட வேண்டியது நமது கடமை. பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும். பெண்கள் கல்வி கற்பது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அஸ்வதா, மனநல மருத்துவர் டாக்டர் நர்மதா ஆகியோர் பங்கேற்று சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்பது பற்றி பேசினர்.

          நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியருக்கு நறுவீ மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

  இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

  முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை செவிலியர் துறை மேலாளர் ஆனந்தி வரவேற்க, முடிவில் மனிதவளத் துறை இணை மேலாளர் அருணா நன்றி தெரிவித்தார்.