தவெக தலைவர் நடிகர் விஜய் இஸ்லாமியர்களுடன் நோன்பு திறந்தார்!

ம.பா.கெஜராஜ்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருக் ஆன விஜய் இஸ்லாமியர்களுடன் இண்ய்ந்து இன்று நோம்பு திரந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் விஜய் கலந்து கொள்கிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் ஏராளமானவர்கள் குவியத் தொடங்கினர்.
இருந்த போதும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் திணறினர். நோன்பு அரங்கில் கட்டுக்கடங்காமல் உள்ளே செல்ல முயற்சித்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்கின.
இந்நிலையில் விஜய் வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி மற்றும் தலையில் குல்லா அணிந்து வந்திருந்தார்.
பின்னர் இஸ்லாமியர்கள் உடன் அமர்ந்து தொழுகை செய்தார். இதையடுத்து நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி குடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் முன்னிலையில் மைக்கில் பேசினார். அதாவது, எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் இஸ்லாமிய சகோதரர்கள், எனது அன்பான கோரிக்கையை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க மிக்க மகிழ்ச்சி என்று பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.</p
#WATCH | Tamilaga Vettri Kazhagam founder and chief Vijay hosts 'Iftar' during Ramzan month, in Chennai pic.twitter.com/tmxP95wEME
— ANI (@ANI) March 7, 2025
>
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தவெக சார்பில் மட்டன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக அளிக்கப்பட்ட பிரத்யேக பையில் மட்டன் பிரியாணி, கத்தரிக்காய் தொக்கு, தயிர் வெங்காயம், சிக்கன் 65, வாட்டர் பாட்டில் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அதில் அன்புடன் விஜய் என்று எழுதப்பட்டிருந்தது.
ஒய்.எம்.சி.ஏ அரங்கில் இருந்து வெளியே வந்து, திறந்தவெளி வேனில் ஏறிக் கொண்ட விஜய் ராயப்பேட்டை சாலையில் சிறிது தூரம் வரை திறந்த வேனில் பயணித்து பொதுமக்களை நோக்கி கைகளை அசைத்தார்.