கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் பணம் - பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் மோடி வழங்கினார்! காணொளியில் வேலூர் ஆட்சியர் பங்கேற்பு!

ம.பா.கெஜராஜ், கு.அசோக்,
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.4000/- பணத்தை பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் மோடி வழங்கினார். இந்த நிகழ்வில் வேலூர் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் காணொளி மூலம் கலந்துக் கொண்டார்.
2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரையோ அல்லது பெற்றோர்கள் இருவரையோ, பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், 2021 ஆம் ஆண்டு மே 29 ந் தேதி பிரதமரால் தொடங்கப்பட்டது.
கொரோனா தொற்றினால் ஆதரவற்றவர்களான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், 18 முதல் 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
அப்படியிருக்க , பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 அடிப்படை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வழங்கி தொடங்கிவைத்தார். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கடன் வாங்க விரும்பினால், அவர்களுக்கு 'பிம்.எம். கேர்ஸ்' உதவி செய்யும் என அவர் தெரிவித்தார்.
அதே போல் கொரோனா சூழலை இந்தியா கையாண்ட விதம் குறித்து பேசிய அவர், 'கொரோனாவின் போது இந்தியா அதை பிரச்சனையாக கருதவில்லை.
ஆனால் தீர்வை கொடுக்கும் நாடாக இருந்தது. நாம் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி வழங்கி வந்தோம். தடுப்பூசிகளை உலகில் உள்ள பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நாடு முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ச்சிபெறும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது' என பெருமிதமாக சொன்னார் பிரதமர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத்தொகை:- காணோளி!
பிரதமரின் காணொளி நீகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் பங்கேற்றார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக ரூ.3 லட்சம் மற்றும் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்பட்டது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. தலைமையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் இழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வைப்பு நிதியும் பெற்றோர் இருவரையும் இழந்தால் ரூ.5 லட்சமும் வைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துல்கொண்டனர்.
இதில் பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் கல்வி பெறுவதற்கான கடன் வசதி, அக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே ஏற்று கொள்ளுதல், அக் குழந்தைகளுக்கு 23 வயது வரையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டம் காப்பீடு பிரிமியத்தையும் அரசே செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்குதல், உயர்கல்வி பயில ரூ.2.50 லட்சம், 23 வயது நிரம்பும் போது வைப்பு தொகை ரூ.10 லட்சமாக உயர்ந்திருக்கும்.