இந்தியை எந்த இடத்திலும் திணிக்கவில்லை!பாஜக கார்த்தியாயினி பேட்டி!

கு.அசோக்,
வேலூரில் மும்மொழி கல்விக் கல்வியை ஆதரித்து - பாஜகவினர் கையெழுத்து இயக்கம் துவக்கம்.
வேலூர் மாவட்டத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாநில பொதுச் செயலாளர் திருமதி காத்தியாயினி வேலூரில் துவக்கி வைத்தார்.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.
இந்த கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில்முகாம் அமைத்து தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, தேசிய கல்விக் கொள்கை மூலமாக பாரத பிரதமர் அவரவர் விரும்பிய மொழியை மூன்றாவது மொழியாக படிக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் தமிழக முதலமைச்சர் இந்தியை திணிக்காதே என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தியை எந்த இடத்திலும் திணிக்கவில்லை.எனவே மும் மொழிக் கல்விக் கொள்கையில் தமிழக அரசு பொய் பிரசாரம் செய்யாமல் விரும்பி கல்வி கற்கும் மாணவர்களுக்கு திமுக அரசு தடையாக இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.