பொது வழி ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் தாசில்தார் மேடம்!

கு.அசோக்,
தளவாய்பட்டறை கிராமத்தில் பொது வழியை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய் பட்டறை கிராமத்தில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர்.
அப்படியிருக்க விவசாயிகள் பயன்பெற்று வரும் அரசு பொது வழி பாதையை தனிநபர் ஒருவர் பாதை நடுவே கல்கம்பம், முள்வேளி அமைத்து யாரும் செல்லாதவாறு
ஆகிரமிப்பு செய்ததை முறையாக அகற்றக்கோரி கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் இணைந்து 60 க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது வழி பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை முறையாக அகற்றி நெல் அறுவடை இயந்திரம் தடையின்றி செல்ல பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியர் செல்வி அவர்களிடம் மனு அளித்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.