கிரீன் சர்கிளில் உள்ள ஹோட்டல்கள் முன் கார்களை நிறுத்தக் கூடாது!கலெக்டர் எச்சரிக்கை!

 ஜி.கே.சேகரன்,

  கிரீன் சர்கிளில் உள்ள ஹோட்டல்கள் முன் வாகனங்களை நிறுத்தக் கூடாது என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

  வேலூர் மாவட்டம்,வேலூரில் விஐபி என்கிற போர்வையில் பொதுமக்களுக்கு சிலர் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 அந்த வகையில், நகரின் மையப் பகுதியில் நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் சர்க்கிள் ஒன்று உள்ளது. அளவுக்கு அதிகமான சுற்றளவு கொண்ட அந்த சர்கிள் அருகே ஆரியாஸ், நம்ம வீடு என்கிற பெயரில் ஹோட்டல்கள் உள்ளன.

  மேற்படி அந்த ஹோட்டல்களுக்கு முன்புறம் கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.

  இது குறித்து போக்குவரத்து காவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததே இல்லை.

 ஆனால் மக்கள் தினம் தினம் வேதனை அனுபவித்து வந்தனர்.

 இதனைக் கருத்தில்கொண்ட முன்னாள் வேலூர் ஆட்சியர் திரு.சண்முக சுந்தரம் இ.ஆ.ப.அவர்கள் ஜனவரி 15.2021 ஆம் தேதி கிரின் சர்க்கிள் அளவை குறைக்க பணிகள் துவங்கும், அப்போது அருகில் உள்ள தீவு போன்ற உள்ள இடமும் அகற்றப்படும் என்று அறிவித்தார்.

  ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த அறிவிப்பு செயல்படுத்தாமலேயே போனது.

  இந்நிலையில் தான் வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு மாற்றங்களை செய்ய ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

 இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணா இ.கா.ப. மற்றும் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை அதிகாரிகளும் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

 பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த ஒருமணி நேரமாக அனைத்து அதிகாரிகளுடன் கிரீன் சர்க்கிள் ஆய்வு செய்தோம். வாகனங்கள் வரும் எண்ணிக்கையை குறைக்கவும் நின்று போகும் நேரத்தை குறைக்கவும் காட்பாடி செல்லும் வாகனங்கள் நேரடியாக செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 மேலும் ஓட்டல்கள் டீக்கடைகள் ஆகியவைகள் உரிய பார்க்கிங்கில் நிறுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

  வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் அப்பகுதியை கடந்து செல்ல மக்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ரவுண்டானா அளவை குறைப்பது எனவும் அங்குள்ள ஓட்டல்களின் வெளியே கார் நிறுத்த தடை விதித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

 நாளை முதல் மாற்றும் பாதையில் சோதனை போக்குவரத்தை நடத்தவுள்ளோம் அணைக்கட்டு குடியாத்தம் கேவிகுப்பம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றி வருகிறோம் அகரம் ,அனைக்கட்டு கவுண்டன்ய மகாநதி ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம் அதே போல் கன்சால்பேட்டை பகுதியிலும் ஆக்கிரமிப்பை அகற்றவுள்ளோம் மக்களுக்கு மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் கோட்டை பகுதியிலிருந்து காட்பாடி செல்ல மாற்று சாலை அமைக்கபடும் என கூறினார்.