கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டை! 156 வழக்குகள் பதிவு!

ஜே.ஹென்றிக்ஸ்,
போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., தனது செயல்பாடுகளை மும்முரமாக்கியிருக்கிறார்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கஞ்சா வேட்டை நடைபெற்று ஒரே நாளில் 10 கஞ்சா குற்றவாளிகள் மீது 10 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 206 நபர்கள் மீது 156 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 428.851 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.