முதல்வர் - பிரதமர் காப்பீட்டு திட்டம்! ஐந்தாண்டை தொடர்ந்து பயணாளிகளுக்கு அட்டை வழங்ங்கினார் ஆட்சியர்!

முதல்வர் - பிரதமர் காப்பீட்டு திட்டம்! ஐந்தாண்டை தொடர்ந்து பயணாளிகளுக்கு அட்டை வழங்ங்கினார் ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,

 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன்  பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு, ஐந்து ஆண்டுகள் நிறைவுவடைந்ததையொட்டி பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார்.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மனித நேய குழந்தைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் ஊராட்சி ஒன்றியம், தெள்ளூர் ஊராட்சி, ஜமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க  பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள்   குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

 மேலும் மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முன்னிலையில்  மாவட்ட திட்டக் குழு தலைவர் திரு.மு.பாபு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

  வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலூர் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைந்துள்ள வேலூர் மாவட்டத்தை சார்ந்த மகளிருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  வாழ்த்து கடிதத்தை சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். 

  இவற்றில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் திரு.செந்தில்,

  வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.மணிமொழி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் திரு.வின்சென்ட் ரமேஷ் பாபு,

இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.பி.பாலசந்தர், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பானுமதி, எம்.எஸ்., மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் திரு.சா.ஆனந்தராஜ், மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பொ.மோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியா,கல்லூரி முதல்வர் முனைவர்.ஸ்ரீராம்பாபு, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர்கள்  திரு.தனசேகரன், திரு.ஸ்ரீகாந்த், உதவி கோட்டப் பொறியாளர் திரு.பிரகாஷ், கல்லூரி முதல்வர் முனைவர்.ஸ்ரீராம்பாபு, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர்கள்  திரு.தனசேகரன், திரு.ஸ்ரீகாந்த்,   மாவட்ட வன  அலுவலர் திரு.கலாநிதி,இ.வ.ப., மாவட்ட வருவாய்  அலுவலர் திருமதி.த.மாலதி, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.