செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்களுக்கு நற்சான்று! திருவாரூர் ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ 77வது சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி வைத்தார், நற்பணியாற்றியவர்களுக்கு சான்றுகள் வழங்கினார். திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் 77வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள், மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் 9 இலட்சத்து 89 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமா£ இ.கா.ப. அவர்கள் இதில் பங்கேற்றார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சமாதானப் பறவையை பறக்க விட்டார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த 200 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மூலம் 36 பயனாளிகளுக்கு 9 இலட்சத்து 89 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சுதந்திர தின விழாவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொரடாச்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளி நெடும்பலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கள்ளிக்குடி, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிக்கோட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி திருமக்கோட்டை, ஆர்.சி.பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூர் ஆகிய பள்ளிகளை சார்ந்த 379 மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொணடனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்.சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தவியாளர்(பொது).பாலசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்.சங்கீதா, கீர்த்தனாமணி உள்ளிட்ட அனைத்துதுறை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
நாம் இன்று 77வது சுதந்திர தினவிழாவினை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஊராட்சியிலும் இன்று கிராமசபா கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த சுதந்திரமானது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இந்த சுதந்திர விழாவில் நாம் அனைவரும் ஏற்ற தாழ்வுகள், வேறுபாடுகள் இன்றி வாழ உறுதி ஏற்க வேண்டும். நாம் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இன்றி வாழ நமது வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும். பெண்கள் வளர்ச்சிக்கு நமது தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக திட்டங்களை தீட்டி உள்ளார்கள்.
அனைத்து பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார்கள். மகளிருக்கு மகளிர் சுயவுதவி குழுக்கள் மூலமாகவும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாகவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை பெண்கள் பயன்படுத்தி தனது குடும்பத்தையும், இந்த சமுதாயத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும். பெண்களின் வளர்ச்சி குடும்பத்தை மட்டுமில்லாமல், சமுதாயத்தையும் உயர்த்திடும். குறிப்பாக பெண் கல்வி சமுதாய மேன்பாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது.
இன்றைய கிராமசபா கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த சாரா தொழில்கள், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 25 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 46 இலட்சம் 30 ஆயிரத்திற்கான கடனுதவிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தலா ரூ.7500 மதிப்பிலான இரண்டு நபர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. உழவர் நலத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு தார் பாய்கள், பண்ணை கருவிகள், தென்னங்கன்றுகள், நெல் நுண்ணுட்டம், மாப்பிள்ளை சம்பா நெல் விதை, உயிர் உரங்கள், தோட்டகலைத்துறையின் சார்பில் மா, மற்றும் கொய்யா கன்றுகள், சுகாதாரத்துறையின் சார்பில் 7 நபர்களுக்கு ஊட்டசத்து தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்.சந்திரா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் வடிவேல், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர்; கீர்த்தனாமணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) .சௌந்தரியா, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்.கார்த்தி,வட்டாட்சியர்.குருமூர்த்தி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்.புவனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.சிவகுமார், விஸ்வாநாதன், அரிச்சந்திரபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி செல்வம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்.ரமேஷ், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.