ஜாதி சமூக தயக்கமின்றி வாக்களிப்போ! ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி!

ஜாதி சமூக தயக்கமின்றி வாக்களிப்போ! ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி!

  ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்று கொடி அசைத்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் தலைமையில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி கொடி அசைத்து வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தூய நெஞ்சக் கல்லூரி வரை மகளிர் ஊர்வலமாகச் சென்றனர்.       

  "இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளை சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில் கண்ணியத்தையும் நிறைவேற்றுவோம்" மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமும் இன்றி மதம் இனம் ஜாதி சமூக தயக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்கள் இன்றியும் வாக்களிப்போம் என்று உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.