சோளிங்கர் கோவிலில் ரோப்கார் துவக்கம்! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

சோளிங்கர் கோவிலில் ரோப்கார் துவக்கம்! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

கு.அசோக்,

சோளிங்கர்  யோக நரசிம்மர் திருக்கோவிலில் 20 கோடி 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த ரோப்காரை பக்தர்கள் வசதிக்காக  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்  கானொலி வாயிலாக ரோப்க்கர் சேவை தொடங்கி வைத்தார். அதேபோல் நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் அரசு கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.15 கோடி மதிப்பீட்டில் 25 வகுப்புகள் கட்டும் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.

  இராணிப்பேட்டை மாவட்டம்  உயர்கல்வித்துறை சார்பில் நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் மேம்பாடு திட்டத்தில் ரூ.7.15 கோடி மதிப்பீட்டில்  25 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு கைத்தறி மட்டும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி இன்று காலை அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

 அப்போது உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆர்டிஓ பாத்திமா, தாசில்தார் செல்வி, ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், கல்லூரி முதல்வர் யூசுப் கான் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 அதே போல் சோளிங்கர்  யோக நரசிம்மர் திருக்கோவிலில் 20 கோடி 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த ரோப்காரை பக்தர்கள் வசதிக்காக  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்  கானொலி வாயிலாக ரோப்க்கர் சேவை தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில்  ஒன்றான இராணிப்பேட்டை மாவட்டம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் தொன்மையான திருக்கோவிலாகும். திருக்கோவில் 750 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலையாகும். இம்மலையில்  நரசிம்மர்  சுவாமி  யோக நிலையில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்து வருகிறார்.

  திருக்கோவில் தமிழக மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமிய தரிசனம் செய்ய வந்து செல்கிறனர். யோக நரசிம்மர் தரிசிக்க வேண்டும் என்றால் 1305 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் படியேறி சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் சிரமப்பட்டனர்.

   எளிய முறையில் பக்தர்கள் அனைவருக்கும் சாமி தரிசனம் செய்யும் வகையில் ரோப்க்கார் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று  தமிழக அரசு 2010 ம் ஆண்டு  9.30 கோடி மதிப்பில் ரோப்க்கார் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு  பணிகள் நடைபெற்று வந்து. தற்போது முடிவு பெற்றது. மேலும் ரோப்கார் குழு உபயதாரர்கள் பக்தர்களுக்கு வசதிக்காக காத்திருப்பு கூடம்கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சுமார் 11 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.

   இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் சேவை கானொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்  ஏ.எம் முனிரத்தினம்  ஆகியோர் பங்கேற்றனர். 

   தொடர்ந்து பக்தர்களுக்கு ரோப்கார் சேவையை தொடங்கி வைக்கம்பட்டது. இதில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை முதல்  ரோப்க்காரில் செல்ல  ஒருவருக்கு நூறு ரூபாய் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.