மலை கிராம பிள்ளைகள் உயர் கல்வி பெற வேண்டும்! ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழிகாட்டல்!

மலை கிராம பிள்ளைகள் உயர் கல்வி பெற வேண்டும்! ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழிகாட்டல்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டு வட்டம்பீஞ்சமந்தை மலை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகையை  மாவட்ட ஆட்சித் தலைவர்  குமாரவேல் பாண்டியன் அவர்கள் வழங்கினார்.

 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.4.50 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 4 அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் . பெ.குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.

  அதனைத்¢  தொடர்ந்து  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மலைக்  கிராமங்களை சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவமாணவிகளுக்கு மொத்தம்  ரூ.3,12,500 /- மதிப்பில் கல்வி உதவித் தொகையையும், அரசு பள்ளிகளில் பயிலும் 125 மாணவமாணவியர்களுக்கு ரூ.2,50,000/- மதிப்பில் கல்வி சார் உபகரணங்களையும், அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 70 மாணவமாணவிகளுக்கு ரூ.2,80,000/-  மதிப்பில் கல்வி சார்ந்த உபகரணங்களையும், ரூ. 34,500 /- மதிப்பில் அங்கன்வாடி மையங்களுக்கான  பாத்திரங்களையும், ரூ 73, 000/-  மதிப்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

  பின்னர் பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்ற தடகள ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களையும்கேடயங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் மலை கிராமங்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும்  ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீஞ்சமந்தை கிராமத்திற்கு நான் முதல் முதலில் வந்த போது சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமமாக இருந்தது.

  ஆனால் இப்பகுதி மக்கள் காலம் காலமாக சாலை வசதி இல்லாத இந்த மலைப்பகுதியில் இருந்து தங்களுடைய பல்வேறு தேவைகளுக்காக மிகவும் சிரமத்தோடு கீழே இறங்கி பயணித்து வந்து கொண்டிருந்தனர். சில நேரங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக உடனடியாக செல்ல முடியாமல் உயிர் பலி கூட ஏற்பட்டிருக்கலாம்.பொதுமக்களின் இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் உடனடியாக இந்த மலை கிராமத்திற்கு சாலை போட பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தரமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

  சாலையில் மழைக் காலங்களில் மண்ணரிப்பு ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கிடும் செய்யப்பட்டுள்ளது மேலும் மலை கிராமங்களில் வாழும் மக்கள் கறவை மாடுகளை வாங்கி அயாதாழில் புரிய  கடனுதவி வேண்டும் என கேட்டுள்ளார்கள். அதில் பீஞ்சமந்தை கிராமத்தைச் சார்ந்த 386 நபர்களுக்கு கறவை மாடுகள் வாங்க கடன் உதவி வழங்குவதற்காக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களும் கறவை மாடுகளை வாங்கி சுயாதாழில் செய்வதற்காக கடன் உதவி கேட்டுள்ளனர்.

  அதற்கான நடவடிக்கையும் விரைந்து எடுக்கப்படும். மலைக்கிராம பகுதிகளில் பள்ளி படிப்பை முடித்து மாணவ, மாணவிகள் மேற்படிப்பிற்காக வெளியூர்களுக்கு சென்று உயர்கல்வி பயில வேண்டும்.

  மலை கிராம மக்கள் தங்களுடைய உள்ளூர் தொழில்களை எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் உயர்கல்வி படித்து நல்ல ஒரு வேலை வாய்ப்பை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு அரசின் சார்பில் தற்பொழுது வங்கிகளுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோரின் சுமைகளை குறைக்கும் வகையில் அரசின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களை பயன்படுத்தி கல்வி கடன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 உயர்கல்வி பயின்று நல்லதொரு வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொண்டால் உங்களுடைய எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கொய்யா, சீதாப்பழம் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி அவற்றை விற்பனை செய்வதற்கும் அரசின் சார்பில் உதவிகள் வழங்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  இந்த பீஞ்சமந்தை மற்றும் சுற்றியுள்ள கிராம பொது மக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்காக பீஞ்சமந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேலும் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பேசினார்.

 அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக 24 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு தனியார் பங்களிப்புடன் சிறப்பாக கட்டி தரப்பட உள்ளது. பீஞ்சமந்தை மலை கிராமத்தில் பயிலும் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு ஒடுகத்தூருக்கு சென்று வருவதாகவும் இங்கேயே தேர்வு எழுத வசதி வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதற்கான நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ. குமார வேல் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்தார்.