. மருத்துவ மதிப்பீடு முகாம் திருப்பத்தூரில் தள்ளிவைப்பு! ஆட்சியர்!

ஆர்.ரமேஷ்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் பிரதி வாரம் செவ்வாய்கிழமை தினத்தன்று நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீடு முகாம் ஓமிக்ரான் - கொரானா தொற்று வேகமாக பரவிவருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா தொற்று குறையும் வரை இம்முகாம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் அரசு விதிமுறைகளை பின்பற்றி ஓமிக்கரான் - கொரானா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.