நறுவீ மருத்துவமனையில் எம்.எல்.ஏ. மற்றும் ஆர்.டி.ஓ.அட்மிட்:- கொரோனா சிகிச்சை!

நறுவீ மருத்துவமனையில் எம்.எல்.ஏ. மற்றும் ஆர்.டி.ஓ.அட்மிட்:- கொரோனா சிகிச்சை!

  கு.அசோக்,

  வேலூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வருவாய் கோட்டாச்சியர் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினரும் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கட்டிட வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாச்சியராக பணியாற்றி வருபவர் செல்வி விஷ்னு பிரியா.

  இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, இதனை அடுத்து வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 இதே போன்று வேலூர் சட்டமன்ற உறுப்பினரான ப.கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 அவருக்கு, இரண்டாவது முறையாக கொரோன பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர் வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாகள்.

  இதனிடையே வேலூர்  சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

¢ இம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.