ரத்த காயங்களை கண்டு செவிலியர்கள் பயப்படக்கூடாது! மருத்துவக்கல்லூரி முதல்வர் அட்வைஸ்!

கு.அசோக்,
செவிலியர் மாணவிகள், அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும், ரத்த காயங்களை கண்டு செவிலியர்கள் பயப்படக்கூடாது, நோயாளிகளை கணிவுடன் கவணிக்க முன் வரவேண்டும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாப்பாத்தியம்மாள் அட்வைஸ் செய்து பேசினார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் அரியூரில் ஸ்ரீநாராயணி செவிலியர் கல்லூரியின் சார்பில் செவிலியர் மாணவிகள் தீபம் ஏற்றும் விழா நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் இக்கல்லூரியின் இணை இயக்குநர் பேராசிரியர் லலிதா புருஷோத்தமன், முதல்வர் பிரபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நைட்டிங் கேர்ள் தீபத்தை முதலாமாண்டு பயிலும் 60 மாணவிகளும் பட்டயப்படிப்பு படிக்கும் 40 மாணவிகள் ஏற்றி உறுதி மொழியை ஏற்றனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாப்பாத்தியம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில் செவிலியர் கல்லூரி மாணவிகள் பயின்று முடித்து நீங்கள் பணியில் சேர்ந்து கணிவுடன் நோயாளிகளை கவணிக்க வேண்டும்.
மேலும் ரத்தகாயம் ஏற்படும் நோயாளிகளை பார்த்து பயப்படாமல் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிர்களை காக்க வேண்டும். மேலும் செவிலியர் பணி மற்ற பணிகளை போல் அல்ல. நோயாளிகளுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மன உறுதியுடன் நீங்கள் பணியாற்றி மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நீங்கள் திகழ வேண்டும் என்று பேசினார்.
இதில் திரளான மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.