ராணிப்பேட்டை போலிசாரின் ஒத்திகை!

ராணிப்பேட்டை போலிசாரின் ஒத்திகை!

  கு.அசோக்,

 குடியரசு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

 குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 26-ந்தேதி காலை குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

 இதற்காக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

 இந்த நிலையில் ராணிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவையொட்டி ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை நடைபெற்றது.  மைதானத்தில் தேசிய கீதம் பாடல் ஒலிக்கப்பட்டு போலீசார் அனைவரும் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினார்கள்.