மளிகைகடைகளில் கள்ளச் சாராயம்!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மே1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிராமத்தில் வரவு செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மக்கள் மனுக்களாக கொடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தங்கள் கிராமத்தில் வார்டு உறுப்பினராக உள்ள சுரேஷ் என்பவர் தனது கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாகவும்
அதேபோல் சிலர் மது விற்பனை செய்வது வருவதாகவும் எனவே குடிமகன்கள் இரவு நேரத்தில் வீடு தெரியாமல் தங்கள் வீட்டைத் தட்டி மது உள்ளதா எனவும் கேட்கிறார்கள்,
இதனால் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது எனவே இது போல் குற்றச் சாம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.