'நம்ம டாய்லெட்' கட்டிடம் கேட்பாரற்று கிடக்கிறது!

G.K.SEKARAN,
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட 'நம்ம டாய்லெட்' தற்போது சேதமடைந்து தண்ணீர் இல்லாமல் அசுத்தமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் சீறுநீர் கழித்து வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் மற்றும் ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் வசதிக்காக நம்ம டாய்லெட் என்ற திட்டத்த்தின் கீழ் கழிவறைகளை அமைத்துக் கொடுத்தனர்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும் கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஈர்க்கும் திட்டமாக நகராட்சி தோறும் நவீன வசதிகளுடன் கூடிய நம்ம டாய்லெட் என்ற திட்டத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் தமிழக அரசு இதற்காக நகராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த நம்ம டாய்லெட் 'திட்டத்தில் மூலம் மாற்றுத் திறனாளிகள் சாய்வுதளத்துடன் கூடிய கழிப்பறை, ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில் ஆறு கழிப்பறைகள் என அனைத்து அம்சங்களும் இந்த நம்ம டாய்லெடில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கழிவறைகள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பமுள்ள பைபர் பிளாஸ்டிக்கினால் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.
பின்னர் இதனை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் வகையில் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் வசதியும், சூரிய மின்சக்தியில் இயங்கும் விளக்கு வசதியும் இந்த கழிவறையில் செய்யப்பட்டன.
மேலும் இத்தனை வசதி கொண்ட"நம்ம டாய்லெட் ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் முத்துக்கடை பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில், போதிய தண்ணீர் வசதி இல்லாமலும், பராமரிப்பில்லாமலும் சுத்தம் இல்லமாலும் கழிவறையின் உள்ளே சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கதவுகள் உடைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பொதுமக்கள் வெளிப்பகுதியிலேயே சிறுநீர் மலம் கழித்து வருகின்றனர்
ஆகவே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் இந்த டாய்லெட்டுகளை நகராட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும்.மாவட்ட நிர்வாகம் நம்ம டாய்லெட் கழிவறைகளை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.