11 பேரை காவு வாங்கிய பிக்கப் வேன் எரிப்பு!

11 பேரை காவு வாங்கிய பிக்கப் வேன் எரிப்பு!

  கு.அசோக்,

  ஜவ்வாது மலையில் கோவிலுக்கு செல்லும்போது கவிழ்ந்து விழுந்து 11 பேர் உயிரிழந்த பிக்கப் வேனுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரிப்பு.

 திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு  புலியூர் கிராமத்தில் இருந்து மினி வேனில் சென்ற 35 பேர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பெண்கள் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களை ஆஸ்பத்திரியில் பார்த்து ஆறுதல் சொன்னார்.

  அப்படியிருக்க விபத்துக்குள்ளான பிக்கப் வேன் இன்னும் பள்ளத்திலிருந்து மீட்கப்படாத நிலையில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் மினி வேனுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.விபத்தில் மக்கள் அதிக அளவில் உயிரிழந்ததால் யாராவது ஆத்திரத்தில் வேனை கொளுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் திருப்பத்தூர் கிராமிய போலிசார் விசாரித்து வருகின்றனராம்.