சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ம.க. போராடும்!

சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ம.க. போராடும்!

ஜி.கே.சேகரன்,

  தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் நிச்சயமாக பாமக போராடும் - அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் சேர்ந்து உடனடியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட புள்ளிவிவரங்களை திரட்டி சட்டம் கொண்டு வந்து அமுல்படுத்த வேண்டும் - நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் வரவேற்பு அதே நேரத்தில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் வாலாஜாவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் பேட்டி!

 இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாவில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுகுழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்றது.

  இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், வேலூர் மாவட்ட செயலாளர் இளவழகன், மாநில துணைதலைவரும், முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் நிர்வாகிகள் கிருஷ்ணன்,ஞானசேகரன்,ஆறுமுகம் முதலியார் மற்றும் மாநில தலைவர் ஜி.கே மணி, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 பாமக மாநில இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*தமிழக அரசு மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்க புள்ளி விவரங்களை விரைவாக சேகரித்து சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.

*பாலாற்றில் குறுக்கே ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணையை அமைத்து நீரை சேமிக்க வேண்டும்

*மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்படுவதால் அவைகளை அரசு மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலாற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

   முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறியதை போல் 75 சதவிகிதம் உள்ளூர்வாசிகளுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

   தோல் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க வேண்டும் காற்றுமாசு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும்.

  சுங்க கட்டணம் உயர்வை குறைக்க வேண்டும், வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும், உடனடியாக தமிழக அரசு புள்ளி விவரங்களையும் கூடுதல் தரவுகளையும் சேகரித்து மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரவேண்டும்.

 சொத்து வரி உயர்வை கண்டித்து நிச்சயம் பாமக போராடுவோம் வாடகை வீட்டில் இருப்பவர்களின் வாடகையும் இதனால் உயரும். வரியை 150 விழுக்காடு வரையில் வரி உயர்த்தியுள்ளனர்.

2 ஆண்டுகள் மக்கள் கொரோனாவால் மிகுந்த பாதிப்பில் உள்ள நிலையில் வரிகளை உயர்த்த கூடாது நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும்.

 மன்னர் ஆட்சியில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்தது, இதுவே மக்களாட்சி காலத்தில் குறைந்துள்ளது. காலநிலை மாற்றங்கள் இதனால் ஏற்படும் நீர்நிலைகளை பாதுகாத்து தூர்வார வேண்டும் மழைநீரை சேமிக்க வேண்டும்.

 நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அங்கு வீடு கட்டியுள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் குறிப்பாக குடியாத்தத்தில் இதே பிரச்சணை உள்ளது.

  அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

 உச்சநீதிமன்றம் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பு சமூக நீதிக்கு கேடான தீர்ப்பு.

  69 விழுக்காடு இட ஒதுக்கீடு பி.சி.,எம்.பி.சி, இஸ்லாமியர் உள் ஒதுக்கீடு ஆகியவைகளுக்கும் புள்ளி விவரங்கள் கிடையாது.

  இந்த தீர்ப்பை வைத்து நாளை யார் வேண்டுமானாலும் 69 விழுக்காட்டை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.

 முதற்கட்டமாக வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க  வேண்டும் அடுத்தகட்டமாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 வன்னியர்கள் சமூக பின் தங்கிய நிலை குறித்து புள்ளி விவரங்கள் இல்லாததால் தான் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தனர்.

  வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அதிமுக மாறி மாறி குறை சொல்வது தேவையில்லாதது.

 அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வந்தனர் திமுக ஆட்சியில் உறுதிபடுத்தினார்கள் இது சாதி பிரச்சணையில்லை தமிழ்நாட்டின் வளர்ச்சி பிரச்சனை என்று சொன்னார்.