வசூல் ராஜா! அபுதாபிக்கு உல்லாச பயணம்!! கல்லூரி முதல்வரை மையப்படுத்தி பரபரப்பு கடிதம்! நிஜமா? பொய்யா?!

ஜி.சாந்தகுமார்,
விடுநர் ஊரீசுக்கல்லூரி கணினியியல் துறை முன்னாள் மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர் ஒருவர் பெயரிலும், பேராயருக்கு கடிதம் எழுதியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதில் குறிப்பாக கல்விக்கு புகழ் பெற்ற நூற்றாண்டை கடந்த ஊரிசு கல்லூரியில் துணை முதல்வராக (மாலைக் கல்லூரி) பணிபுரியும் அ.ரஸ்ஸல் பிரேம்ராஜ் பெஞ்சமினை மையப்படுத்தி பல்வேறு சங்கதிகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
அ.ரஸ்ஸல் பிரேம்ராஜ் பெஞ்சமின் கல்லூரிக் கல்வித்துறை மற்றும் UGC பரிந்துரைத்துள்ள கல்லூரிப் பேராசிரியருக்கான அடிப்படைக் கல்வித் தகுதியே இல்லாதவர்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகம் கடைசியாக வெளியிட்டுள்ள FACULTY SENIORITY LIST ல் இவர் பெயரே கிடையாது . ஆனால் இந்தப் போலிப் பேராசிரியருக்கு இளங்கலை , முதுகலைத் துறைத்தலைவர் , துணை முதல்வர் ( மாலைக்கல்லூரி ) கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் என்றெல்லாம் முறையற்ற வகையில் பொறுப்புகளை வழங்கி கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழகத்தையும் , மாணவர்களையும் ஏமாற்றி வருகிறது .
தற்போது திரு. ப . ஜோஸ்வா பிரேம்குமார் பேராயருக்கு எழுதியுள்ள 14.05.2022 தேதியிட்ட கடிதம் பற்றி மூத்த பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது அக்கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் சத்தியம் என்றார்.
வசூல் ராஜா ரஸ்ஸல் : மூன்றாண்டு இளங்கலை வகுப்புகளில் ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 95 மாணவர்கள் பயில்கின்றனர் . திரு . ரஸ்ஸல் இவர்களிடம் ( a ) Association செலவுகள் என்று கூறி முறையே முதலாமாண்டு மாவணவர்களிடம் ரூ .500 / - , இரண்டாமாண்டுக்கு ரூ .150 / - மற்றும் மூன்றாமாண்டுக்கு ரூ .100 / - என வசூலிக்கிறார்.
தமிழ்த்துறைத் தலைவர் தேர்வுக்கு மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தபோது , கல்லூரி முதல்வர் பொத்தாம் பொதுவாக 02.07.2021 அன்று அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யாரும் எந்தத் தொகையும் மாணவர்களிடம் நேரடியாக வசூல் செய்யக்கூடாது என்று அறிவித்தார்.
ஆனால் , இதே தவறை திரு . ரஸ்ஸல் காலம் காலமாக செய்து வருகிறார் ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை . மேலும் போன்ற தவறுகளைத் தட்டிக் கேட்க முதல்வருக்கே அருகதையில்லை . ஏனென்றால் , கல்லூரி முதல்வரே ஆசிரியர்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட கருத்துருக்கள் , , புத்தாக்கப் பயிற்சிக்குச் செல்ல அனுமதி கோருதல் , ஒவ்வொரு பச்சை மை கையெழுத்திற்கும் ரூ.1000 /- வசூலிக்கிறார்.
இவ்வாறு ஆசிரியர்களை அலைக்கழிப்பதில் , அலுவலக மேலாளர் திரு.கிருஷ்ண மூர்த்திக்கும் பெரும் பங்கு உண்டு . பேராயரையும் , முதல்வரையும் வேண்டுமென்றே தவறாக வழி நடத்துபவரே இவர்தான்.
06.02.2013 அன்று 17 மாணவர்கள் கையெழுத்திட்டு , திரு . ரஸ்ஸல் தனது பினாமியாகத் தன் மனைவியின் நிர்வாகத்தில் ஊரீசு கல்லூரிக்குப் பின்புறம் நடத்தி வந்த Computer center ல் சேரும்படிக் கட்டாயப்படுத்தித் தலைக்கு ரூ .3,000 / - வசூலிப்பதாகக் கல்லூரி முதல்வர் அருளப்பனிடம் புகார் கடிதம் அளித்தனர்.
இவ்வாறு ஆண்டுக்கு சுமார் 120 மாணவர்களிடம் ரூ .3,60,000 / - வசூல் செய்தார் .
அதன்பின் பேராயர் இராஜவேலு கல்லூரிச் செயலரானபோது, ரஸ்ஸலின் அட்டூழியம் அத்துமீறிப் போகவே , பாதிக்கப்பட்ட ஙிசிகி ஆசிரியர்கள் ஆமென்ராஜ் , ஆபேல் தனசிங் ஆகியோர் அவரிடம் முறையிட்டு , ஙிசிகி ஞிஜீt . தனியாகப் பிரிக்கப்பட்டது.
இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு நாள் , ஒரு மணி நேரம் கூட வகுப்பறையில் , கரும்பலகையில் எழுதிப் பாடம் நடத்தியது கிடையாது . இவர் 1999 - 2001 கல்வி ஆண்டுகளில் பல்கலைக்கழக தேர்வு / செய்முறைத் தேர்வு துவங்குவதற்கு முன்பதாகவே வினாத்தாளை புகைப்படம் எடுத்து திருவண்ணாமலையில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்ட போது , உடன் பணியாற்றிய பெண் ஆசிரியை மீது பழி சுமத்தி , அவரை பலிகடா ஆக்கினார் .
M.Sc. , Comp . Sc . Course ஆரம்பித்த போது 10 destop computers வாங்கப்பட்டது . ஆனால் , தற்போது 4 Computers மட்டுமே உள்ளது . மீதி 6 மாயமாகிவிட்டது . கல்லூரியில் , குறிப்பாக இந்தத் துறையில் Annual stock taking , inventory records எதுவுமே 25 வருடங்களாக இவர் maintain பண்ணவில்லை . இதைப்பற்றி நிர்வாகமும் கவலைப்படவில்லை .
இத்துறை இவரது சொந்தப் பண்ணை போலும் இவர் பண்ணையார் போலவும் நடந்து கொள்வதை அனுமதித்திருப்பது வெட்கக்கேடு, இவரது துறையில் சிவரஞ்சனி என்ற மாணவியும் , பிரதீப் என்ற மாணவனும் ( பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன ) காதல் வயப்பட்டனர் . ஏற்கனவே திருமணமான Rasul க்கும் அந்த மாணவி மீது மயக்கம் . எனவே அந்த இளம் காதலர்களுக்கு வில்லனாக மாறி மாணவனை மிரட்டி , மாணவியை மயக்கி அவர்களைப் பிரித்தார் .
மாணவியைத் தன்வசப்படுத்தினார். துறை வளாகத்திலேயே இவர்களது லீலைகள் பற்றி 2019 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதை நினைவுபடுத்துகிறோம்.
அந்த மாணவன் காதல் தோல்வியால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்றும் தனியார் குழுமத்தில் பணியாற்றி வருகிறார்.
மாணவி தற்போது அபுதாபியில் பணியாற்றுகிறாள் " ரஸ்ஸல்தான் எனது Hero அவரோடு தான் வாழ்வேன் " என்று பித்தம் தலைக்கேற பிதற்றிக் கொண்டிருக்கின்றாள்.
அவளது ஏற்பாட்டின் பேரிலேயே ரஸ்ஸல் சமீபத்தில் அபுதாபிக்குச்சென்று காமக் களியாட்டங்களை அரங்கேற்றிக் கூத்தும் , கும்மாளமும் அடித்துவிட்டு வந்துள்ளார் .
. இவரது பல்வேறு பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு ஒரே ஒரு சான்றினை மட்டும் சமர்ப்பிக்கின்றோம் . 2015 - 2018 தீணீtநீலீ- இல் படித்த ஏழை மாணவி அனுசுயா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இவர் வசூல் செய்யும் போதெல்லாம் பணம் தராததால் செய்முறைத் தேர்வில் தொடர்ந்து Fail போட்டு 23:21 இல் தான் அந்த மாணவியால் தேர்ச்சி பெற முடிந்தது . இதனை இவரே மாணவர்களிடம் கூறி இந்த கதிதான் உங்களுக்கும் என்று மிரட்டியிருக்கிறார் .
இது குறித்து சம்மந்தப்பட்ட முதல்வர் ரஸ்ஸல் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.
சார் நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னை மாலைக் கல்லூரிக்கு முதல்வராக நிர்வாகம் நியமித்தத்தை பொறுக்கமட்டாமல் இப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று அவர் ஒரு பெண் பேராசியரின் பெயரை குறிப்பிட்டார்.
மேலும் சிலரிடம் பேசிய போது, கல்லூரி நிர்வாகம் நேர்மையாக நடந்துக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் போது இது போன்ற மொட்டையாக கடிதங்களை எழுதி இடையூறு செய்கிறார்கள் என்கிறார்கள்.
மேற்படி கடிதங்களில் பெண் தொடர்பானது உட்பட ஏகப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் அவைகளுக்கு விளக்கம் அளிக்க முன்வந்தால் அவை பரிசீலித்து வெளியிடப்படும்.