ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த கூடாது!அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த கூடாது!அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

 வ.மகேசு,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சர்ச்சையில் ஒற்றையாய் சிக்கிதவித்தவர் ஓ.பி.எஸ். என்பதை அறிவோம். இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும் ஆங்காங்கே குரல்கள் எழ துவங்கியுள்ளன.

அந்த வகையில் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் எரிந்துக் கொண்டிருந்த எடப்பாடி உருவ பொம்மையை தண்ணீர்  ஊற்றி அணைத்தனர்.

 வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரம்,

  இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு அவமானமா என்று இராமநாதபுரம் அதிமுகவினர் ஆத்திரமடைந்துள்ளனர்.

 இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டித்தேவர் வலசை கிராமத்தில் ஓபிஎஸ் அவர்களை அவமானப்படுத்தியதை கண்டித்து அதிமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிலிருந்து ஓ.பி.எஸ். வெளியேறிய போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சிலர் தண்ணீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது வாகனத்தின் சக்கரம் பஞ்சர் செய்யப்பட்டது.  

அதனை கண்டிக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டித்தேவன் வலசை கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் உடையத் தேவன் தலைமையில், துணைச் செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ஆகியோர் முன்னிலையில் அந்த பகுதியில் நடைபெற்றது.

 மேலும், வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த கூடாது. அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதை எடப்பாடி ஆதரவாளர்கள் செய்து வருவதைக் கண்டித்தும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவமானப்படுத்திய செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

 இரு அணிகளும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றிபெற முடியும் ஆகையால் அதிமுக உடையும் நிலையை உருவாக்க நினைப்பதை கண்டிக்கிறோம் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கோஷமிட்டனர்.