கலைஞரின் சொந்த கிராமத்தில் கிராமசபா கூட்டம்!

க.பாலகுரு,
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சொந்த ஊரான காட்டூர் ஊராட்சியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வழியுறுத்தி கிராம சபா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு, காட்டு ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் வாசு முன்னிலையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் இல்லையெனில் வருங்காலங்களில் வாக்களிப்பதற்கு சிரமம் என்றும் எனவே அனைவரும் உடனடியாக ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.
ஊரகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடிப்பு நடவடிக்கை குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் சுகாதாரம், ஜல்ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன், துணைத் தலைவர் ரேவதி செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ப்ரியா, தலைமை ஆசிரியர் பானுமதி பற்றாளர் திலகவதி , கால்நடை மருத்துவர் வேதசூர்யா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.