ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய்:-அமைச்சர் துரைமுருகன் தகவல்!

ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய்:-அமைச்சர் துரைமுருகன் தகவல்!

கு.அசோக்,

ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கு குழாய் அமைக்கப்பட்டு இந்த அரசு மக்களின் குடிநீர் பிரச்சனையை இந்த அரசு தீர்த்து வருவதாக மாநில நீர்ப்பாசனம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.  

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட வசூர் கிராமத்தில் இன்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்பாசனம், கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 அப்போது 11 சுய உதவிகுழுக்கள்,  247 பயனாளிகளுக்கு மூணு கோடியே 76 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் மக்களின் பிரச்சனைகளை மனுவாக பெற்று பிரச்சனைகளை தீர்ப்பது தான் மனுநீதிநாள் முகாம் என தெரிவித்தார். மேலும் பொன்னை பகுதியில் 40 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அதே பகுதியில் 15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும் கட்டப்பட்டு வருகிறது, இதன் மூலம் தண்ணீர் பஞ்சம் இருக்காது தேர்தலின் போது என்னுடை தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளின் படி சேர்காடு கூட்ரோட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்படும்.

  அதேபோல் மக்களின் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க இப்பகுதியில் காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வருவதென நினைத்தேன் ஆனால் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சனை இந்த அரசு தீர்க்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.