முறையாக பணி செய்யுங்கள் இல்லையென்றால் பட்டையை கிளப்பிவிடுவேன்!துரைமுருகன் ஆவேசம்!

ஜி.கே.சேகரன்,
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என மக்கள் புகார் கூறியுள்ளனர் அவ்வாறு தொடர்ந்தால் பட்டையை கிளப்பி பணி செய்யாத மருத்துவர்களை பணி நீக்கம் செய்துவீட்டுக்கு அனுப்பிவிடுவேன் - கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுகொள்ள வேண்டும் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொன்னையில் கொரோனா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்து பேச்சு.
வேலூர் மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள பொன்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை துவங்கி வைத்தார் பின்னர் கொரோனாவால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசுகையில், கொரோனா வராத ஆட்கள் தமிழகத்தில் மிக குறைவு.
எனக்கு கூட கொரோனா வந்தது தேர்தல் நேரத்தில் நான் அதற்கு முன்னாள் தடுப்பூசி போட்டுகொண்டேன்.
ஆக, எனது உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் இதையும் தாண்டி மூன்றாவது அலை வருவதாக கூறுகிறார்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியாது.
மக்களுக்கு வியாதிகள் வராமல் தடுக்க அரசாங்கம் வைத்தியம் செய்கிறது. ஆனால் நோய் வருபவர்களை தேடி மருத்துவர்கள் செல்வது தான் திமுக ஆட்சி. மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய தத்துவத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார்.
எனவே கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுகொள்ள வேண்டும், ஊசி போட்டுகொண்டால் நலத்திட்டம் சில இடங்களில் வழங்கபடுகிறது பொன்னையை பொருத்தவரையில் இரண்டு விஷயங்களை சொன்னேன், ஒன்று கல்லூரி இந்த ஆண்டு கொண்டுவருவேன்.
நான் கட்டிய மேம்பாலம் 50 ஆண்டுகளாகிவிட்டதால் பொன்னையில் புதியதாக மேம்பாலம் பெற்று தந்துள்ளேன்.
ஆட்சிக்கு வந்தவுடன் பொன்னைக்கு பல திட்டங்களை செய்துள்ளேன். பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியாக மருத்துவர்கள் வருவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
முறையாக பணி செய்யுங்கள் இல்லையென்றால் பட்டையை கிளப்பிவிடுவேன் இடமாற்றம் செய்யமாட்டேன், பணிநீக்கம் செய்துவிடுவேன்.
புகார் என்றால் என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டு கூறுங்கள் என பேசினார்.