விநாயகர் சிலை சேதம்! ஸ்டேஷன் முற்றுகை!

கு.அசோக்,
பேர்ணாம்பட்டு அருகே சாத்கர் பகுதியில் செல்வ விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியது கண்டித்தும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி மக்கள் பேர்ணாம்பட்டு காவல்நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனர்
வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு அருகே சுமார் சாத்கர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தினுள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதியதாக விநாயகர் வாங்கி வைத்து ஆலயத்தினுள் வைத்து வழிப்பட்டு சிலையை வைத்துள்ளனர் ஆனால் 4 பேர் அடங்கிய மர்ம நபர்கள் ஆலயத்தினுள் குதித்து சிலையை திருட முயன்று அது முடியாத ஆத்திரத்தில் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் விநாயகர் தலைமுழுவதும் சேதமடைந்தது மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சாத்கர் பகுதியை சேர்ந்தவர்கள் பேர்ணாம்பட்டு காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.