மனைவி மாற்றும் கும்பலில் தமிழக விஐபிகள்!

மனைவி மாற்றும் கும்பலில் தமிழக விஐபிகள்!

  ம.பா.கெஜராஜ்,

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவிகளை மாற்றி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று கேரளாவில் பிடிப்பட்டது.

  இந்நிலையில் அந்த கும்பல் செயல்படுத்தி வந்த பல்வேறு விதமான சமூக ஊடக குழுக்களில் தமிழகத்தைச் சேர்ந்த விஐபிகள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம்.

  "காபி வித் கேராளா கேர்ல்ஸ்", காபி கிளப், ரிலாக்ஸ் ப்ளிஸ் என்பதைப் போல 14 குழுக்கள் வைத்திருந்ததாம் அந்த கும்பல்.

 இது பற்றின விவரம் வருமாறு,

   கேரள மாநிலம், கோட்டயம் கருக்கச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 8-ந்தேதி காவல் துறையினரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

  அந்த பெண்ணின் புகாரை வாசித்து பார்த்த காவல் அலுவலர் அதிர்ந்தார்.

¢   அந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போது கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவதும்,  அவர்களால் புகாதாரரான அந்த பெண் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் தெரிய வந்தது.

 இந்த பாதக செயலுக்கு அந்த பெண்ணின் கணவரே உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

  உஷாரான போலீசார் பெண்ணின் கணவரை கைது செய்து கவனித்தனர்.

 அப்போது, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவது தெரிய வந்தது.

 அந்த தகவலின்பேரில், இக்குழுவிற்கு மூளையாக செயல்பட்ட ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் செல்போன், லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

  புகார் கொடுத்த பெண்ணிடமும் விசாரித போது, அவரது கணவரை காதல் திருமணம் செய்து வளைகுடா நாட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்தபோது பெண்ணின் கணவருக்கு அவரது நண்பர் மூலம் மனைவி மாற்றும் குழுவின் லிங்க் கிடைத்துள்ளது.

 அந்த லிங்க்கை திறந்து பார்த்ததும், அதில் பல்வேறு ஆபாச படங்கள் இருந்துள்ளது. அதோடு, திருமணம் ஆனவர்கள் அவர்களின் மனைவியை பிறருடன் பகிர்ந்து கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என்ற தகவலும் இருந்தது.

  இதன் மூலம் சபலத்திற்கு ஆளான பெண்ணின் கணவர் குழுவில் இணைந்ததோடு, மனைவியையும் இணைய வைத்துள்ளார்.

  முதலில் காதல் கணவரின் ஆசைக்காக பிறருடன் உல்லாசமாக இருந்த பெண், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட மறுத்தார். ஆனால் கணவர் அவரை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

 மனைவி மாற்றும் குழு பற்றியும், அதில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் வெளியே தெரிவித்தால், உல்லாசமாக இருக்கும் காட்சிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதோடு, இணைய தளத்திலும் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். 

 எகவே  பயந்து போன் அந்த பெண், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றி வெளியே கூறாமல் தவித்துள்ளார்.

   ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இதுபற்றி தனது சகோதரரிடம் கூறி அழுதுள்ளார். அவா வாயிலாக  போலீசாரிடம் தெரிவித்த பிறகுதான் இந்த குழுக்கள் பற்றிய விவரங்கள் வெளியே தெரிந்தது.

  கேரளாவில் இதற்கு முன்பு கூட நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில் ரகசியமாக நடந்து வந்துள்ளது.

 ஆனால் இதுவரை அவர்கள் பிடிபடவேயில்லை.

   இந்நிலையில் ஒரு பெண் அளித்த புகாரால் தற்போது அந்த மும்பல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

   இதுபற்றி போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், இக்குழுவில் உள்ளவர்கள் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத அளவிற்கு ஒன்று சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.

  முதல்கட்ட விசாரணையில், தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

  குறிப்பாக அரசுஉயர் அலுவலர்கள் இதில் அடக்கமாம்.

  இது போன்ற குழுக்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

  இதில் பெண்கள் பலர் உள்ளனர். அவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் உண்மையை கண்டறிய வேண்டியுள்ளது என்றார்.

 இதுகுறித்து இணையவாசி ஒருவர் தெரிவிக்கையில், இது போன்ற குழுக்கள் பல மாநிலங்களிலிருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

செல்போன் பயன்பாட்டாளர்களே இல்லை என்றாகிவிட்ட நம் சமூகத்தில் இணையம் மூலம் வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது. அதுதான் முக்கிய சேப்டி ஆகும்.

  அப்படியே தவறி கிளிக் செய்தாலும் தொடர்ந்து அதனுள் நுழைவதை தவிருங்கள் அது  பல்வேறு ஆபத்தை தவிர்க்கும் என்றார்.