போலிசாரை வெளுத்து கட்டிய "லஞ்ச புகார் பெட்டி"!

  மூ.பிரதீப்.

  கடமை தவறும் காவல் துறையின் ஒரு சிலரை லஞ்ச புகார் பெட்டி என்கிற வாட்ஸாப் குழு வெளுத்து கட்டியுள்ளது.

  வழக்கறிஞர் திரு.ராஜகுரு என்பவர் நிர்வகிக்கும் அதில் இன்று வெளியான விவரம் வருமாறு:-

  போலீசார் இழைக்கும் தவறுகள் பற்றிய தகவல்கள் இக்குழுவில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதைப் படிப்பவர்களுக்கு பாவம் போலீஸ் என்றுதானே தோன்றும்.

  ஆனால் உண்மை அதுவல்ல, உதாரணத்திற்கு வேலூர் மாவட்டத்தில் மட்டும் எடுத்துக் கொண்டால், இங்குள்ள காவல் நிலையங்கள் பலவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலரின் பார்வைக்கு புகார் சென்ற போதிலும், புகார்தாரர்களுக்கு உரிய சட்ட பரிகாரம் கிடைப்பதில்லை.

   குறிப்பாக சொல்லவேண்டுமெனில் வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள ஹோட்டல் கண்ணாவில் ஒரு ரவுடி கும்பல் ஒரு நபரை தாக்குகிறது.

  அந்தக் காட்சிகள் சிசிடிவி யிலும் பதிவாகியுள்ளது.

அப்போது அந்த உணவகத்துக்கு உளவுத் துறையைச் சேர்ந்த ஒருவரும் வந்திருக்கிறார், அவர் இதைப் பற்றி அறிகிறார்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

  இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக எஸ்.பி.க்கு முறையீடு செய்கிறார்.

 அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் புகாரை டிஸ்போஸ் செய்கிறார்கள்.

இதனால் மனவேதனை அடைந்த புகார்தாரர் போலீஸ் ஸ்டேஷன் என்பது ரவுடிகளுக்கு துணை போகவா அல்லது பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிகாரம் தரவா என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 அதேபோல் வடக்கு காவல் நிலையத்தில் எடுத்துக்கொண்டால் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏ.பி.எல் என்கிறவருக்கு சொந்தமான சிமெண்ட் கண்டைநர் லாரி சென்னை சில்க்ஸ் அருகே ஆட்டோ மீது முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.  அதில் சிக்கி இரண்டு நபர்கள் காயமுற்றனர்,இதில் ஒருவர் பேராசிரியை.

அவர் "நலம்" என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் .

 ஆனால் அந்த காயம் ஏற்பட்ட பேராசிரியை குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை, எனவே அவர் இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கிறார் .

அதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

 ஆகவே எஸ்.பி. க்கு ஆன்லைனில் முறையீடு செய்தார்.

அதன் பின்னர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த ரமேஷ் என்கின்ற எஸ்.ஐ. சத்துவாச்சாரியில் உள்ள பேராசிரியை வீட்டுக்கு காலங்காத்தாலேய சென்றார்.

அவருடன் விபத்துக்கு காரணமான லாரி உரிமையாளரின் அடியாள் ஒருவரைஅழைத்துச் சென்று பேராசிரியரை அடையாளம் காட்டி இருக்கிறார். 

  ஆட்டோ ஓட்டுனரின் விவரத்தை மாற்றி நடவடிக்கை எடுத்து உள்ளதை சமாளிக்கவே இப்படி ஆள் காட்டினாராம்

 இதேபோல் குடியாத்தம்,இங்கு  தடைசெய்யப்பட்ட லாட்டரியும் கள்ள சாராய பிஸினஸும் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக குடியாத்தம் பகுதியில் செல்வம், பேர்னாம்பட்டு ஏரியாவில் அன்வர் என பிசினஸை வெளுத்து வாங்குகிறார்கள்.

   இதுகுறித்து இஸ்லாமிய அமைப்பு ஒன்று புகார் அளித்தும் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருட்டுத்தனம் செய்யும் மேற்படி முதலாளிகள் சுதந்திரமாக தங்கள் பிசினசை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 மேலும் மணல் கடத்தலுக்கு இங்குள்ள டிவிஷன் அதிகாரியே டோக்கன் கொடுப்பதாகவும் தகவல்.

   மேலும் அமைச்சர்  தொகுதிக்குட்பட்ட மேல்பாடி காவல் நிலையம் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ.காப்பாற்ற பட்டிருக்கிறார்.

 அடுத்ததாக, சொத்தை பிரித்து தர கோரி எழுந்த பிரச்சினை குறித்து லோகேஷ் என்பவர் வேலூர் விருதம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான லோகேஷ் திடீரென தான் மறைத்துவைத்திருந்த பெட் ரோல் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயன்றார்.

  இப்படிப்பட்ட  போலீசார்  மீது பரிதாபப்படுவது நியாயம் இல்லை தானே என பதியப்பட்டது.

  இதற்கு குழு உறுப்பினர் ஒருவர் சிறப்பான பதிவை பதிலாக அளித்திருக்கிறார்.

  காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகின்றது. குற்றவாளியும் புகார்தாரும் ஒன்றாகி நீதிமன்றத்தில் சமாதானமாகி  வெளியே போகின்றனர்

   வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றம் செய்த நபருக்கு உதவி செய்கின்றது , வழக்கறிஞர் உட்பட

கடந்த மூன்று மாதங்களாக வேலூர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிக்கு  எதிராக எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை காரணம் என்ன? காவல்துறை அதிகாரிகளுக்கு வழக்கும் போட தெரியவில்லை ,சாட்சி சொல்லக்கூட தெரியவில்லை நீதிமன்றமும் சிரிக்கின்றது வேடிக்கை பார்க்கின்றது

  நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் ஏன் குற்றம் நிருபிக்கப்படவில்லை என்று காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளருக்கு அவருடைய அதிகாரி மெமோ, நோட்டிஸ் வழங்க வேண்டும், சம்பள உயர்வு, அரசு படிகளை கட் செய்ய வேண்டும் . எஸ். ஆர். புத்தகத்தில் அதற்கான விளக்கங்கள் எழுதப்பட வேண்டும் பதவி உயர்வு வழங்கக்கூடாது

சாதி /மொழி, இனம், பணம் அரசியல் செல்வாக்கு இதைவிட அனைத்தும் கிடைக்கும்போது சட்டம் ஒழுங்கு கொள்ளை கொலை, திருட்டு கடத்தல் என குற்றவாளிகளை பிடித்து , தண்டனை வாங்கி தருவதா? போலிஸ் க்கு வேலை

பல வருடங்களாக காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் காவலர்களை மண்டலம் விட்டு மண்டலம் மாற்றினால் காவல்துறை மட்டுமின்றி நீதித்துறையும் உருப்படும்

இல்லை யெனில் குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கும்

இக்குழுவில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் கூட இப்பணியை செய்தால் நன்றாக இருக்கும் என சற்று டீடைல்லாக பதிவிட்டுள்ளார்.